India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. வைகுந்தம் காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. சுமார் 36 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகே அனைவரும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 82,886 பேர் சாமி தரிசனம் செய்தனர். 44,234 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் காணிக்கையாக ₹4.09 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.

பெரியார் முன்வைத்த சமுகநீதி அரசியலுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி செயல்படுவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சியை தங்கள் கட்சி நட்பு சக்தியாகத்தான் பார்ப்பதாகவும், அக்கட்சி மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாதென்றும் குறிப்பிட்டார். பெரியார் அரசியலுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி செல்வதை ஆபத்தாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என கூறும் குழந்தைகள் நல மருத்துவர்கள், இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பு நின்றுவிடும் எனவும், எந்த வைரஸ் தொற்று காரணமாகவும் இது தூண்டப்படலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) என்பது இரு வழிகளை கொண்ட பொருளாதார வழித்தடம் ஆகும். கிழக்கு பாதை – வளைகுடா நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும்; வடக்கு பாதை வளைகுடா நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும். 2023இல் இத்திட்டத்தை முதன்முதலில் இந்தியா முன்மொழிந்தது. இது ஆசியா – ஐரோப்பா இடையே பொருளாதாரப் பிணைப்பை ஏற்படுத்த வழிவகை செய்யும் எனக் கூறப்படுகிறது.

IMEC மூலம் சீனாவின் பெல்ட் & ரோடு திட்டத்திற்கு இந்தியா நேரடி சவால் விடுத்திருப்பதாகவே புவிசார் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சீனாவின் திட்டத்தைப் போல் அல்லாமல், IMEC திட்டம் தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகிறது. பொருளாதார ரீதியில் சீன மேலாதிக்கத்திற்கு இந்தியா வைத்திருக்கும் இந்த ராஜதந்திர ‘செக்’கால் சீனா ஆடிப்போயிருப்பதாகக் கூறப்படுகிறது .

டெல்லியில் 2023இல் நடந்த ஜி-20 மாநாட்டில், IMEC திட்டத்தை இந்தியா முன்மொழிந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் சவுதி, அமெரிக்கா,EU நாடுகள், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த வழித்தடம் சுமார் 6,000 கி.மீ.நீளம் கொண்டதாகும் (இதில் 3,500 கி.மீ. தொலைவு கடல் வழி பாதை). இதில் ரயில் & சாலை இணைப்பை மேம்படுத்தும் அதே நேரத்தில் மின்சாரம்,தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் நேற்று தெரிவித்து இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அவரது கருத்து அமெரிக்காவிற்கு வேண்டுமானால் பொருந்தும் எனவும், இந்திய இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு பயிற்சி அளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் விவரங்களும் EMIS தளத்தின் மூலம் ஆன்லைனில் பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் மதிப்பெண், பள்ளி சார்ந்த தகவல்கள் பெற்றோருக்கு SMS மூலம் தெரியப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெற்றோரின் செல்போன் எண்களை சரிபார்க்க OTP அனுப்பப்படுகிறது. அச்சமடையாமல் பள்ளி ஆசிரியர் தானா என்பதை உறுதிப்படுத்திவிட்டு, பெற்றோர்கள் OTP எண்ணைப் பகிருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம், இடைத்தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற வேண்டும், இதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் கூறியதாகத் தெரிகிறது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தீபா தேவி என்ற பெண், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அவர் செலுத்திய ரூ.195 பணத்தை திரும்ப கொடுத்த Blinkit நிறுவனம், அமுல் நிறுவனத்துக்கு இது குறித்து தெரியப்படுத்தியதாகவும் கூறியது. இரண்டு நாள்களுக்கு முன்பு, ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த செய்தியே இன்னும் ஓயாத நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.