News May 5, 2024

சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு – 2026

image

2026ஆம் ஆண்டை சர்வதேச பெண் விவசாயிகளின் ஆண்டாக அறிவிக்க ஐ. நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து & வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது விவசாயம். அத்தகைய உற்பத்தித் துறையில், பெண் விவசாயிகளின் உழைப்பை அங்கீகரிப்பதுடன், அவர்கள் மீதான ஊதியம் & பாலின பாகுபாடுகளை களையவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் FAO திட்டமிட்டுள்ளது.

News May 5, 2024

தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் அனுமதி

image

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக காலை 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்து மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தொடர்ந்து, மதிய உணவுக் கூட எடுத்துக்கொள்ளாமல், 1 மணியளவில் தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர்.

News May 5, 2024

தமிழ்நாட்டில் கனமழை பெய்யும்

image

தமிழகத்தில் மே 7 மற்றும் 8ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 8ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

வெயிலுக்கு சென்னையில் இளைஞர் பலி

image

சென்னையில் வெயில் தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூரில் கட்டிட தொழில் செய்துவந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சச்சின் (25) நேற்று வெயிலில் மயங்கி விழுந்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று முற்பகலில் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

News May 5, 2024

தோல்வி பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது

image

RCB-க்கு எதிரான 52ஆவது லீக் போட்டியில், தோல்வியடைந்தது வருத்தத்தை அளித்தாலும், அதனை கடந்து சென்றாக வேண்டும் என்று GT அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், சின்னச்சாமி மைதானத்தில் 170 – 180 ரன்கள் வரை அடித்திருந்தால், அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்ற பாடத்தை இந்த தோல்வி எங்களுக்கு கற்றுத் தந்துள்ளது எனக் கூறினார்.

News May 5, 2024

கொலையா? தற்கொலையா?

image

மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் கடிதம் தொடர்பாக விசாரித்து வருவதாக டிஐஜி மூர்த்தி விளக்கமளித்துள்ளார். உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்று கூறிய அவர், கடிதத்தில் பெயர்கள் உள்ள நபரிடம் விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஜெயக்குமார் மாயம் என புகார் தரும்போதே காவல்துறை, மருமகனுக்கு எழுதிய 2 கடிதங்கள் தரப்பட்டதாகவும் கூறினார்.

News May 5, 2024

நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?

image

சிலர் 3 லிட்டர், 4 லிட்டர் என்று கணக்கு வைத்து தண்ணீர் குடிப்பது வழக்கம். அது அநாவசியம் என்கிறார் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் நவிநாத். அதேபோல, தாகமே இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிக்கும் நடைமுறையும் தேவையற்றது என்கிறார். நமது உடலுக்கு எப்போதெல்லாம் தண்ணீர் தேவையோ, அப்போதெல்லாம் அது தாகம் என்னும் சமிஞ்சையை கொடுக்கும். அப்போது மட்டும் தேவையான தண்ணீர் அருந்தினால் போதுமானது.

News May 5, 2024

நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவை தவிர்த்து மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

News May 5, 2024

ஒரு ஆண்டு காத்திருந்தது ஏன்?

image

கர்நாடகா எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள அவரை பாஜக அரசு காப்பாற்ற முயல்வதாக காங். குற்றம்சாட்டி வந்தது. இதுதொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரஜ்வாலின் 3,000 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை வைத்துக்கொண்டு வாக்கு அரசியலுக்காக ஓராண்டு கர்நாடக அரசு காத்திருந்ததாக விமர்சித்துள்ளார்.

News May 5, 2024

RCB இன்னும் ICUவில்தான் உள்ளது: ஜடேஜா

image

ஐபில் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துவந்த பெங்களூரு அணி தற்போது 3 போட்டிகளில் வெற்றிபெற்று தலை தூக்கி இருக்கிறது. இதுகுறித்து பேசியிருக்கும் இந்த அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, “RCB வெண்டிலேட்டரில் இருந்து வெளியே வந்துவிட்டது. ஆனால், இன்னும் ஐசியுவில்தான் உள்ளது. பெங்களூரு பவுலர்கள் அசாத்திய செயலை செய்திருக்கின்றனர்.” என்று கூறியிருக்கிறார். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா RCB?

error: Content is protected !!