India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விராட் கோலியின் பேட்டிங் திறன் குறித்து கவலைப்பட தேவையில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். இப்படியான ஒரு சூழலில் விராட் இருப்பது நல்லதுதான் எனக் குறிப்பிட்ட அவர், இந்த சூழல் அவரை சிறப்பாக விளையாட தூண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் நிரம்பியுள்ளதால் போட்டிக்கு ஏற்ப வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 20ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை-நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கவும், சிலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அவரது பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் மையங்கள் பிரபலம். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அங்கு பயிற்சி பெற்றுவந்த பிஹாரைச் சேர்ந்த 17 வயது மாணவன், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். 2015 முதல் கோட்டாவில் பயிற்சி பெற்ற மாணவர்களில் இதுவரை 106 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

கங்கா தேவி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்ததாக புராணங்களில் கூறப்படும் நாளை இந்துக்கள் ‘கங்கா தசரா’ விழாவாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கங்கையில் புனித நீராடினால் பாவங்கள், நோய்கள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில், இன்று ‘கங்கா தசரா’ கொண்டாடப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடியதுடன், அயோத்தியிலுள்ள ராமர் கோயிலிலும் பயபக்தியுடன் வழிபட்டனர்.

பெங்களூருவில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 265 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் பொறுமையாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 37, பூஜா 31* ரன்கள் எடுக்கவே 50 ஓவரில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. இன்னும் சற்று நேரத்தில் தெ.ஆ., பேட்டிங் செய்ய உள்ளது.

இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க தாயின் வயது 20-40க்குள் இருக்க வேண்டும். 40 வயதிற்குள் தாய் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹72,000. ஆண் வாரிசு இல்லை என்ற சான்று, 2 பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தபின், அதன் நகலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள சமூக நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உறுதியாக தெரிவிக்கிறார். கட்சிகள் பலவீனமாக இருக்கும் போது, மின்னணு இயந்திரங்கள் மீது பழி சுமத்துவதாகவும், EVMஇல் முறைகேடு செய்ய முடியும் என கூறுபவர்கள் நிரூபித்து காட்ட மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். முறைகேட்டை நிரூபிக்க தேர்தல் ஆணையம் பல முறை வாய்ப்பு அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் சுமார் 1 கோடி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் காலியாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அனராக் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 7 பெருநகரங்களில் மட்டும் 1 கோடி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், யாரும் குடியிருக்காமல் காலியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் ₹1.5 கோடிக்கும் மேல் உள்ள சொகுசு வீடுகளின் கட்டுமானம் 1000% அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரவிருக்கும் அனைத்து தேர்தல்களையும் வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். தொழில்நுட்பம் என்பது பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே என கூறிய அவர், அதுவே பிரச்னையை உருவாக்கினால் அதன் பயன்பாட்டை நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும், EVM இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்ற எலான் மஸ்கின் கருத்துக்கு பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டிற்கான தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரேஷன் அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ₹25000க்கான ( மொத்தம் ₹50 ஆயிரம்) வைப்பு தொகையாக வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.