India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 3D தொழில்நுட்பத்தில், பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் 2 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில், மாலை டீசர் வெளியாவதை குறிப்பிட்டு படத்தின் புதிய போஸ்டரை சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். டிரம்ப் நமது அடிப்படை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஜோ பைடனும் நானும் இணைந்து நமது உரிமைகளைப் பாதுகாப்போம். துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை எடுத்துரைப்போம். டிரம்புக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உள்ளது, என்று அவர் டிவீட் செய்துள்ளார்.
காங். சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம். 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்க உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று முதல் நாளை (20.03.24) வரை விருப்ப மனு பெறப்பட உள்ளது. பொதுத்தொகுதிக்கு ₹30,000, தனித்தொகுதி, மகளிருக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ₹15,000, சட்டமன்ற தொகுதிக்கு ₹10,000 செலுத்தி மனுவை பெறலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சிக்கான டோக்கன் வழங்கியதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை விதியை மீறியதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென்கோடி தொகுதியான குமரி, எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில், சாதிரீதியான வாக்குகளைவிட மதரீதியான வாக்குகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இதுவரை இங்கு நடந்த 4 தேர்தல்களில் திமுக 1, காங். (கூட்டணி) 2, பாஜக 1 என வெற்றி பெற்றுள்ளன.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தனது ஓய்வை திரும்பப் பெற்றுள்ளார். முன்னதாக அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரையை ஏற்று தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து வரும் 22ஆம் தேதி நடைபெறும் வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
பெண் குழந்தையை பெற்றெடுத்தபின் நடிகை ஷ்ரேயா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்திய நேர்காணலில் ரஜினி குறித்து பேசிய அவர், ‘சிவாஜி படத்தில் நடிக்கும்போது நீங்கள் தற்போது ஹிட் படங்களில் நடித்துள்ளீர்கள். நாளை இந்த நிலைமை மாறலாம். எப்பேதும் ரசிகர்களோடு மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். அவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள்’ என ரஜினி அட்வைஸ் செய்ததாக கூறியுள்ளார்.
கோடைகாலம் தொடங்கும் முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், மோர் மட்டுமின்றி ஸ்ட்ராபெர்ரி வெள்ளரி சம்மர் பூஸ்ட் ட்ரை பண்ணி பாருங்கள். ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி, 1 ஆரஞ்சு, 1 கப் வெள்ளரியுடன் தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை கலந்து அரைத்து, ஜூஸ் தயார் செய்து பருகலாம். இந்த ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதுடன், உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
ஒரே இரவில் பாமகவின் முடிவு தமிழக அரசியலை மாற்றியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு நன்றி தெரிவித்த அவர், ராமதாஸ் யோசித்த பல விஷயங்களை மோடி செயல்படுத்தி வருவதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சேலத்தில் நடக்கும் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புணி பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருட்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால், ‘தேசிய நுகர்வோர் உதவி மையத்தில்’ புகார் செய்யலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும், 8800001915 என்ற எண்ணில் உங்கள் புகார்களை SMS வாயிலாக அனுப்பலாம். அரசு இணையதளத்திலும் குறைதீர்க்கும் வசதி உள்ளது.
Sorry, no posts matched your criteria.