India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 உலகக் கோப்பை தொடரின் 39ஆவது லீக் போட்டியில், பப்புவா நியூ கினியா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்கள் முடிவில், 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய நியூசி., அணி வெறும் 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பில் அபார வெற்றி பெற்றது.

*திமுக ஆட்சியில் தமிழகத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது – இபிஎஸ்
*மத்திய அரசுக்கு ரயில்வே ஊழியர்கள் குறித்து அக்கறையில்லை – மம்தா பானர்ஜி
*அபுதாபி இந்து கோவிலில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது.
*MCLR எனப்படும் நிதி அடிப்படையிலான கடனுக்கான வட்டியை SBI 0.10% உயர்த்தியது.
*இந்தியா-கம்போடியா இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பேடிஎம் பேங்க் வசதிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை தொடர்ந்து, பேடிஎம் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் டிக்கெட் தொழிலை வாங்க, உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் உறுதியானால், அது சொமேட்டோவின் மிகப்பெரிய நகர்வாக கருதப்படும். முன்னதாக, 2020இல் Uber Eatsஐ சொமேட்டோ கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அணு ஆயுதங்களுக்காக வரலாற்று உச்சமாக கடந்த ஆண்டு $91 பில்லியன் (₹76 லட்சம் கோடி) டாலர் செலவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் அணு ஆயுதங்களுக்காக செலவிடப்படும் தொகை 33% உயர்ந்துள்ளதாக ICAN ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் அதிநவீன அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை உலகளவில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகா, தற்போது கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள நிலையில், சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு அந்தத் தொடரிலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், மேஷம், மிதுனம், கடகம், மகர ராசியினருக்கு பண மழை கொட்டப் போகிறது. குறிப்பாக, அபரிமிதமான பண வரவு, நகை, ஆடம்பர பொருள்கள், வீடு, நிலம் வாங்கும் யோகம், ஊதிய உயர்வு, உயர்ந்த பதவியில் பணி மாறுதல், பெற்றோர், உறவினர்களின் ஆதரவு போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், கேமிங் துறை சார்ந்த பங்குகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பட்ஜெட்டில் கேமிங் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவுவதுதான். எதிர்பார்த்தபடி, ஜிஎஸ்டி வரி குறைந்தால், கேமிங் துறை சார்ந்த நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என்பதால், அத்துறை பங்குகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை மாதந்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வாளர்களுக்கு, பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை விநியோகிப்பதில் கவனம் தேவை என அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த 20 நாள்களில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், வீடு இல்லாத ஏழை எளியோருக்கு தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கி, வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களையும் தவெக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பப்புவா நியூ கினியா 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக சார்லஸ் அமினி 17 ரன்கள் எடுத்தார். நியூசி., சார்பில் சிறப்பாக பந்துவீசிய பெர்குசன் 4 ஓவர்கள் வீசி ரன்கள் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். போல்ட், சௌதி, சோதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Sorry, no posts matched your criteria.