India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தானை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னதாக, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவிலும் இடம்பெறவில்லை. இதனால், கட்சியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தநிலையில், மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இபிஎஸ் முடிவு செய்திருந்ததாகவும், செலவை முன்னாள் அமைச்சர் ஒருவரை கவனித்து கொள்ள கேட்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் பெரும்தொகையை தன்னால் செலவிட முடியாது, அப்படி செலவிட்டாலும் வெற்றி கிடைக்குமா என உறுதியாக தெரியாது என்பதால் மறுத்து விட்டதாலும், சீனியர்களின் அழுத்தத்தினாலுமே புறக்கணித்ததாகத் தெரிகிறது.

அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அம்பயரிங் செய்த இந்தியர் என்ற பெருமையை நிதின் மேனன் பெற்றிருக்கிறார். இவர் 23 டெஸ்ட், 58 ஒருநாள், 45 டி20 என மொத்தம் 126 போட்டிகளில் அம்பயரிங் செய்திருக்கிறார். முன்னதாக 125 போட்டிகளில் வெங்கட்ராகவன் அம்பயரிங் செய்ததே சாதனையாக இருந்தது. சர்வதேச அளவில் 448 போட்டிகளில் அம்பயரிங் செய்து பாகிஸ்தானின் அலீம் தார் முதலிடத்தில் இருக்கிறார்.

பாட புத்தகத்தில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்ற பெயரை பயன்படுத்த NCERT குழு பரிந்துரைத்திருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், “பாரத், இந்தியா என இரண்டு பெயர்களுமே அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கின்றன. ஆகையால் இதில் சர்ச்சைக்கு இடமே இல்லை. புத்தகங்களில் எங்கெல்லாம் பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் பயன்படுத்துவோம்” என்று NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஹட்சன் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஆரோக்யா பால் (Full Cream) விலையை லிட்டருக்கு ₹2 குறைத்துள்ளது. கொரோனாவுக்குப் பின் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், முதல் முறையாக தனியார் நிறுவனம் விலையைக் குறைத்துள்ளது. இனி அரை லிட்டர் ஆரோக்யா பால் பாக்கெட் ₹36க்கும் ஒரு லிட்டர் பாக்கெட் ₹68க்கும் விற்கப்படும். ஆரோக்யா தயிர் விலையும் கிலோவுக்கு ₹4 குறைக்கப்பட்டு ₹67ஆக விற்பனையாகிறது.

கன்னட நடிகர் தர்ஷன் மிகவும் மோசமானவர் என்றும் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார். ரசிகர் ரேணுகாசாமியை சித்தரவதை செய்து கொலை செய்த வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய ரம்யா, “தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர். ரவுடிகளை ரசிகர்களாக வைத்திருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

40 வயதில் கோடீஸ்வரராக நிதி ஆலோசகர்கள் சில ஆலோசனை அளித்துள்ளனர். 25 வயதாகும் நபர் மாதம் ரூ.25,000- ரூ.30,000 ஊதியம் ஈட்டுகிறார் எனில், 15:15:15 என்ற மியூச்சுவல் பண்ட் விதிப்படி, மாதம் ரூ.15,000 தொடர்ச்சியாக முதலீடு செய்து, ஆண்டுக்கு 15% வட்டி கிடைத்தால், 40 வயதில் ரூ.1 கோடி கிடைக்கும். எனவே 15% வட்டித் திட்டத்தில் முதலீடு செய்து கோடீஸ்வரராகும்படி நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலில் கேல்சியம் சத்து இருப்பதால் எலும்பு வலுப்படும். தேயிலையில் caffeine இருப்பதால் சோர்வு நீங்கும். அதேநேரத்தில் இந்த இரண்டும் கலந்து தயாரிக்கப்படும் தேனீர், மசாலா தேனீர் தினமும் அருந்துவது சரியா? என்ற கேள்வி நம்முள் பலருக்கும் எழும். அதற்கு, இந்த வகை தேனீரை தினமும் அருந்தினால், வாயுத் தொல்லை, அஜீரண பிரச்னை, உடல்பருமன், தூக்கமின்மை போன்றவை ஏற்படும் என உடல்நல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற அவர்களின் படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர், விசாரணைக்காக அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து வாழ்வாதாரம் தேடி மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில், கைது சம்பவம் மீண்டும் தொடங்கியுள்ளது.

ராகுல் காந்தி, சிவ்ராஜ் சிங் செளஹான் ராஜினாமா செய்ததால், வயநாடு, புத்னி தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. மக்கள் வரிப்பணத்தை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தாமல், அரசியல் காரணங்களுக்காக பதவி விலகும் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தலாமா? அரசியலுக்காக பதவி விலகுவோரிடம் பணம் வசூலித்து தேர்தல் நடத்த வாய்ப்பில்லையா? என வாக்காளர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.