India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் ஷர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருவரும் சிறப்பாக விளையாடினர். இந்த நிலையில், கிரிக்கெட் வாரிய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் ஷர்ஃப்ராஸ், துருவ் ஆகியோரை ஊதியப் பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் UPSC CSE தேர்வுத் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மே 26ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மைத் தேர்வு (Prelims) ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ஆம் தேதி நடப்பதாக இருந்த வனத்துறை தேர்வுகளுக்கான Screening ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. நாளை முதல் நாளில், இரவு உற்சவர்களான ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். 20, 21ஆம் தேதிகளில்- சகஸ்ர தீபலங்கார சேவை, 22, 23, 24ஆம் தேதிகளில்- ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகின்றன.
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் ஒன்றுபட்டு நிற்போம்! வென்று காட்டியே தீருவோம்! என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த, மக்கள் விரோத பாஜக அரசை விரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்ற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைய அனைவரும் ஒத்துழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்பிஐ வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீஸர்களை தேர்வு செய்வதற்கான இறுதி முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 2000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் பல கட்டங்களாக நடைபெற்றன. இறுதியாக, ஜனவரி 21ஆம் தேதிக்கு பிறகு நேர்காணல் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை <
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ, சைவ உணவுக்கென தனி ஆட்களை நியமித்திருக்கிறது. இவர்கள் பச்சை வண்ண உடை உடுத்திக் கொண்டு சைவ உணவகங்களுக்கு மட்டும் சென்று, சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உணவில் வேற்றுமையை ஒழிக்க வேண்டும் என்று ஒருபுறம் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, குடலிறக்கப் பிரச்னை இருந்தது தெரிய வந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டிருக்கிறார். இதனால் வரும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.
கட்சிப் பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது. அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரை வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னத்துக்கு பதிலாக இரண்டு அணிகளுக்கும் தனி சின்னத்தை வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் நேற்று மனு அளித்திருந்தார். அதற்கு எதிராக இபிஎஸ் தற்போது மனு அளித்துள்ளார்.
மதக்கலவரத்தை தூண்டியதாக பாஜக MP தேஜஸ்வி சூர்யாவை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். நாகர்ட்பேட் பகுதியில், இஸ்லாமியர்கள் நமாஸ் செய்தபோது, மொபைல் கடைக்காரர் முகேஷ் என்பவர் அனுமன் பாடலை இசைத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முகேஷ் தாக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து தேஜஸ்வி உள்ளிட்டோர் பேரணி சென்றனர். அப்போது தேர்தல் விதிகளை மீறி மத வெறுப்புப் பேச்சுகளை பேசியதாக போலீசார் அவரை கைது செய்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் 5 கட்சிகளுடனான கூட்டணியை பாஜக தமிழகத்தில் உறுதி செய்துள்ளது. அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி அதிமுகவினர் பாஜகவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி மொத்தமாக பாஜகவுடன் சேர்ந்துக் கொண்டது. கொங்குநாடு முன்னேற்றக் கழகம் மற்றும் பாமக ஆகியவையும் பாஜகவுடனான கூட்டணியை அறிவித்துள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.