India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெ. ஜெயவர்த்தன் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். முன்னதாக 2014 (வெற்றி), 2019 (தோல்வி) தேர்தல்களில் தென் சென்னையில் போட்டியிட்ட அவர், தற்போது 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். 2014 இல் ஜெயவர்த்தன் தனது 26 வயதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது என்று திமுக உறுதியளித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், “எங்கள் கூட்டணி அரசு அமைந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். ரயில்வே துறையில் கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும். விமானக் கட்டணம் முறைப்படுத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
I.N.D.I.A. கூட்டணி அரசு மத்தியில் அமைந்தால், சமையல் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படுமென திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். வங்கியில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் பிடிக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேளாண் விளை பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு +50% லாபம் என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 361 நீக்கப்படும். முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட மக்களவைத் தேர்தல் வேட்பாளர் முதல் பட்டியலில் 16 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஜெயவர்த்தன், ராயபுரம் மனோகரன் தவிர்த்து மற்ற 14 பேரும் புது முக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3 மருத்துவர்கள், 2 பொறியியலாளர்கள், 3 வழக்குரைஞர்கள், ஒரு முனைவர் என 16 பேரும் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டயங்களை பெற்ற நன்கு படித்த பட்டதாரிகளாக உள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் இருந்து JD(S) வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட 5 தொகுதிகளை JD(S) கேட்டதாக தெரிகிறது. அதில் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த JD(S) தலைவர் குமாரசாமி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் மனநிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
*நீலகிரி – ஆ.ராசா, *தூத்துக்குடி – கனிமொழி, *திருவண்ணாமலை – அண்ணாதுரை, *ஆரணி – தரணிவேந்தன், *தருமபுரி – ஆ.மணி, *சேலம் – செல்வகணபதி, *தஞ்சாவூர்- ச.முரசொலி, *தென்காசி – ராணி, *கோவை – கணபதி ராஜ்குமார், *பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி, *ஈரோடு – பிரகாஷ், *கள்ளக்குறிச்சி – மலையரசன் உள்ளிட்டோர் திமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.
இந்தியாவை மத்தியில் ஆளும் பாஜக அரசு பாழாக்கி விட்டதாக திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசினார். அப்போது, “நாட்டை பாஜக அரசு பாழ்படுத்தி விட்டது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை” என்று விமர்சித்தார்.
*வட சென்னை – கலாநிதி வீராசாமி, *மத்திய சென்னை – தயாநிதி மாறன், *தென் சென்னை – தமிழச்சி தங்கப்பாண்டியன், *ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, *காஞ்சிபுரம் – செல்வம், *அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், *வேலூர் – கதிர் ஆனந்த், பெரம்பலூர் – அருண்நேரு, தேனி – தங்கதமிழ்ச்செல்வன்
Sorry, no posts matched your criteria.