India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

* தனியார் பள்ளிகளில் சாதி ரீதியிலான பெயர்களை நீக்க வேண்டும். *நீக்க தவறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். *அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்போரின் பெயர்களில் சாதி இடம் பெற்றிருந்தால் நீக்க வேண்டும். *அரசு ‘கள்ளர் மறுவாழ்வு’ மற்றும் ‘ஆதி திராவிடர்’ நலன் என பள்ளி பெயர்களில் வரும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என சந்துரு தலைமையிலான ஒருநபர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பெரும்பாலும் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை என புலம்புபவர்களைதான் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூருவை சேர்ந்த தம்பதி மாதம் ₹7 லட்சம் சம்பாதிக்கும் நிலையில், அதை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். பணத்தை எப்படி செலவழிப்பது என ஆலோசனை கோரிய அவர்களின் X வலைதள பதிவு வைரலாகி வருகிறது. மாத கடைசியில் வங்கி கணக்கில் ₹3 லட்சம் மீதமிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், பவர் பிளேயில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் படைத்துள்ளது. ஆஃப்கன் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில், விளையாடிய WI, முதல் 6 ஓவர்களில் 92/1 ரன்களை குவித்தது. இதன் மூலம் அந்த அணி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2014இல், அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து எடுத்த 91 ரன்களே, பவர் பிளேயில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான LIC, தனக்கு சொந்தமான சொத்துகள், கட்டடங்கள் எதையும் விற்கவில்லை என விளக்கமளித்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள கட்டடங்களை விற்று ₹60,000 கோடி நிதியை, LIC திரட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்துள்ள LIC, அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் தங்களிடம் இல்லை எனவும், பாலிசிதாரர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசியும் மையமாக, பாஜக ஆளும் மாநிலங்கள் மாறிவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல், 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வழக்கம் போல பிரதமர் மோடி மெளனம் சாதிப்பதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் சர்க்கரைப் பொங்கல் வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளித்திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிலையில், 1-10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் 8 போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். முதல் போட்டிக்கு பின்னர் 3-4 நாளில் 2 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவித்த அவர், எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என்றார். இந்திய அணி 20ஆம் தேதி ஆப்கனையும், 22இல் வங்கதேசத்தையும், 24இல் ஆஸி., அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.

இசைக் கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தொய்வின்றி வழங்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாக பயணிக்கும் போது 50% கட்டணச் சலுகை வழங்குமாறும், இசைக் கருவிகளை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் எடுத்துச் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சிவகங்கையில் இசைக்கருவியுடன் பயணிக்க அனுமதி மறுத்தது சர்ச்சையான நிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆதார்-பான் எண்களை இணைக்கும்படி மக்களை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை யார் உதவியும் இல்லாமல் நீங்களே செய்து கொள்ளலாம். <

எம்ஜிஆர் போல திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நடிகர் விஜய் நினைக்கிறார் என்று செல்லூர் ராஜூ பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது எனக் கூறிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் என தெரிவித்தார். தவெக – நாதக கூட்டணி அமைக்க முயற்சி நடந்து வரும் நிலையில், செல்லூர் ராஜூ மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.