News June 18, 2024

கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டமாக அறிவிப்பு

image

கடந்த சில நாள்களாக தவெக – நாதக கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் பரவியது. இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய்யின் ரசிகர்கள் நாதகவிற்கு வாக்களிப்பார்கள் என பேசப்பட்டது. ஆனால், விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்பில் 2026 சட்டமன்ற தேர்தல் வரை, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது நாதகவினருக்கு சற்று அதிர்ச்சியாக மாறியுள்ளது.

News June 18, 2024

சூர்யா படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி

image

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, ‘விடுதலை’ படத்திற்கு பிறகு கதையின் நாயகனாக மாறியுள்ளார். தற்போது கதாநாயகனாக பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், மற்றுமொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த படத்தை இயக்க, சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

News June 18, 2024

ஜூலை முதல் “கலைஞர் கனவு இல்லம்” திட்டம்

image

“கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தை ஜூலை மாதம் முதல் தொடங்கவும், பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ₹3.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதல் நிதிக்கு, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ₹1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.

News June 18, 2024

விபத்து ஏற்படுத்திய ஆந்திர MP-யின் மகள் ஜாமினில் விடுதலை

image

சென்னையில் கார் விபத்து ஏற்படுத்திய, ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள், மாதுரி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பெசன்ட் நகர் அருகே மாதுரி ஓட்டிச் சென்ற கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில், நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த பெயிண்டர் சூர்யா பலியானார். இது தொடர்பாக மாதுரி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பீடா மஸ்தான் YSR காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராவார்.

News June 18, 2024

பீஃப் ஃப்ரை வாங்கிய வாடிக்கையாளர் ஷாக்!

image

உணவகத்தில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி, பூரான், பிளேடு இருந்ததாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள உணவகத்தில் வாங்கிய பீஃப் ஃப்ரையில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மாதிரிகளை சோதனைக்கு எடுத்து சென்றனர்.

News June 18, 2024

ஸ்டேட் பேங்கில் FD திட்டங்களுக்கான வட்டி உயர்வு

image

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க், FD திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அதன்படி, 180 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான வைப்புத் தொகைக்கான வட்டியை 0.25% அதிகரித்துள்ளது. இதனால், 180 நாள்கள் முதல் 210 நாள்களுக்கான வட்டி 6%இல் இருந்து 6.25%ஆகவும், 211 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான நாள்களுக்கான வட்டி 6.25%இல் இருந்து 6.50%ஆகவும் அதிகரித்துள்ளது.

News June 18, 2024

நான் நாட்டின் தலைமை சேவகன்: மோடி

image

பாபா விஸ்வநாத், கங்கா தேவி, காசி மக்களின் அன்பால், தான் 3ஆவது முறையாக நாட்டின் தலைமை சேவகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் பேசிய அவர், வரலாற்று வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றில் எழுதப்பட்டிருப்பதாகவும், ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி 3ஆவது முறையாக தேர்வாவது அரிதானது என்றார்.

News June 18, 2024

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்!

image

இந்தியாவில் தங்க நகைகளின் தேவை மந்தமாக இருப்பதாக, ICRA தர நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை தங்கம் 19% விலை உயர்ந்துள்ளதாக கூறும் பொருளாதார நிபுணர்கள், இதன் எதிரொலியாக பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுவதாக தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விற்பனை மதிப்பு அடிப்படையில் 6-8% உயர்ந்தாலும், எடை அடிப்படையில் 4%ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 18, 2024

விஜய் நடிப்பதை நிறுத்தினால் நஷ்டமில்லை: நடிகை கஸ்தூரி

image

விஜய் சினிமாவை விட்டு விலகினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். விஜய் 30 வருடமாக மட்டுமே சினிமாவில் நடிப்பதாக கூறிய அவர், 150 ஆண்டுகளாக சினிமா இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஒரு நபருக்காக சினிமா நிற்காது என்றும், அது பலரின் பங்களிப்போடு தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும் என்றார். கஸ்தூரியின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

News June 18, 2024

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்

image

ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மே, ஜூன் மாதத்திற்கான பருப்பு, எண்ணெய் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சற்றுமுன் அறிவித்துள்ளார். 3 ஆண்டில் ₹14,697 கோடியில் பருப்பு, ₹64.42 கோடியில் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது என்றும், மே மாதத்திற்கான பருப்பு, பாமாயிலை ஜூன் மாதம் கடைசி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!