India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் கார் தொடர்ந்து 2 மாதங்களாக அதிக விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 17,547 பஞ்ச் கார்கள் விற்பனையானது. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 19,158 கார்கள் விற்பனையாகியுள்ளன. 2ஆவது அதிகபட்சமாக மாருதி சுஜூகியின் வேகன் ஆர் மாடல் கார்கள் 17,850-ம், 3ஆவது அதிகபட்சமாக மாருதி சுஜூகியின் பிரஸ்ஸா எஸ்யுவி கார்கள் 17,113-ம் விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், தி.மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும். இதனால், ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். 222 ரன்கள் இலக்கை துரத்தி வரும் RR அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக கேப்டன் சஞ்சு, 33 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 73 ரன்களை குவித்தார். RR அணி தற்போது வரை 13 ஓவர்களில் 135/3 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000, 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் நிலையில், இதுவரை 16 தவணைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 17ஆவது தவணைப் பணம் ஜூன் மாதம் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி20 கிரிக்கெட் தொடரில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய அணி வீரர் என்ற பெருமையை சாஹல் தன்வசமாக்கினார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அவர், இன்றைய போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இதனிடையே, T20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் பல மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. க்யூலெக்ஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவும் இக்காய்ச்சல், 1937ஆம் ஆண்டு உகாண்டாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தலைவலி, உடல்வலி, வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதுவரை இக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
இரவில் ஆழ்ந்து தூங்கும் போது கனவுகள் தோன்றும். அப்போது சிலருக்கு கனவில் தெய்வங்களும் வருவதுண்டு. அப்படி கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனவில் தெய்வம் தெரிகிறது எனில் இறைச் சிந்தனை மிகுந்திருக்கிறது என்று அர்த்தம். இதனால், அந்த கனவு காண்போருக்கு தெய்வ அருள் சேரும்; விரைவில் மங்களகரமான செய்தி வரும்.
அரியலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி என்ற இடத்தில் சாலையோரம் லாரி நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார், லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
நாட்டு பசுநெய்யை ஆயுர்வேத மருத்துவ நூல்கள் ‘திரவ தங்கம்’ என்று போற்றுகின்றன. நெய் பழசாகப் பழசாக விசேஷ நற்குணங்களை அடைகின்றது. நெய்யை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா 3 அமிலம் உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்கிறது. கபவாதம், எலும்பு வலு இழப்பு போன்ற ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்புடைய நோய்களை விரட்டி அடிக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 8 முதல் மே 13ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.