India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல நடிகை அமலாபாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், மகிழ்ச்சியான 2 குழந்தைகள் எனப் பதிவிட்டுள்ளார். இதனால் அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்க உள்ளதாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். முன்னதாக ஜகத் தேசாய் என்பவரை 2ஆவது திருமணம் செய்த அமலாபால், சமீபத்தில் தாயாகப் போவதாக தெரிவித்திருந்தார்.
2008- ராஜஸ்தான், 2009- ஐதராபாத், 2010- சென்னை, 2011- சென்னை, 2012- கொல்கத்தா, 2013- மும்பை, 2014- கொல்கத்தா, 2015- மும்பை, 2016- ஐதராபாத், 2017- மும்பை, 2018- சென்னை, 2019- மும்பை, 2020- மும்பை, 2021- சென்னை, 2022- குஜராத், 2023- சென்னை. நடந்து முடிந்த 17 சீசன்களில், அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன. இம்முறை வெற்றி பெறப்போவது யார்?
ஹிட்டான ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க தீபிகா படுகோன் சம்பளம் வாங்கவில்லை. கடந்த 2007இல் வெளியான அந்தப் படத்தை தயாரித்து கதாநாயகனாக ஷாருக்கான் நடித்திருந்தார். அந்தப் படம் மூலம்தான் தீபிகா படுகோன் அறிமுகமானார். மொழி கடந்து அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதில் சம்பளம் வாங்காமல் தீபிகா நடித்துள்ளார். எனினும், அந்த ஒரு படம் மூலம் பலகோடி சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் உயர்ந்தார்.
நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், “எந்த சின்னம் கேட்டாலும், அதனை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள். இதற்கு எல்லாம் நானும் என் தம்பிகளும், தங்கைகளும் சோர்ந்துவிட மாட்டோம். 23ஆம் தேதியன்று நடக்கும் கூட்டத்தில், 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைப்பேன்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில், 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக செல்வாக்குள்ள வேட்பாளர்களை நிறுத்துவதால் ரெய்டு நடத்தி அவர்களில் ஒருவரை கைது செய்ய உள்ளதாக தனக்கு தகவல் வந்ததாக அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இதைப் பற்றி தாங்கள் கவலைப்பட போவதில்லை என்றும் அவர் கூறினார்.
பொன்முடி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பொன்முடியை அமைச்சராக்க ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திர சூட், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூற முடியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தாண்டு அமேசான் பிரைமில் வெளியாகும் தமிழ் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ▶சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, ▶நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம், ▶அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘கேங்ஸ் – குருதிபுனல்’ வெப் தொடர், ▶புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் நடிக்கும் ‘சூழல் 2’ வெப் தொடர்.
ஓபிஎஸ்-க்கு ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும் என்று பாஜக கறார் காட்டுவதால் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவரச ஆலோசனை மேற்கொண்டார். ஒரு தொகுதியை பெற எதிர்ப்பு தெரிவித்து புகழேந்தி, கு.ப.கிருஷ்ணன், மருது அழகுராஜ், சுப்புரத்தினம் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், ஓபிஎஸ் முடிவெடுக்க முடியாமல் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
தேர்தல் ஆணையர்கள் சட்டத்தை சீராய்வு செய்யப் போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் சட்டத்தில், தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் இடம் பெறும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனங்களுக்கு தடைகோரும் மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இச்சட்டத்தை சீராய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “WI அணிக்கு எதிரான எனது முதல் டெஸ்ட் போட்டியின்போது, பயத்தில் இருந்தேன். அப்போது என் அருகில் வந்த சச்சின், உலகக் கோப்பைக்காக 21 வருடங்கள் காத்திருந்ததை நினைவுபடுத்தி ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு தான் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.