News May 8, 2024

இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி

image

கர்நாடகாவின் குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி (1,493 அடி) இந்தியாவின் உயரமான நீர் வீழ்ச்சியாக உள்ளது. இது ஆசியாவில் 2ஆவது உயரமான நீர் வீழ்ச்சியாகும். இது ஷிமோகா மாவட்டத்தில், அகும்பே அருகே வாராஹி ஆற்றில் அமைந்துள்ளது. ஒடிசாவில் உள்ள பரேஹிபானி நீர்வீழ்ச்சி (1,309), மேகாலயாவில் நோஹ்கலிகாய் (1,115) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. தமிழ்நாட்டில், பழனியில் உள்ள எலி வால் நீர் வீழ்ச்சியே (975) மிக உயரமானது.

News May 8, 2024

மாலை நேர உடற்பயிற்சியின் சிறப்புகள்

image

*மாலை நேர உடற்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். *நம் உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் வரும். *அலுவகத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் தடைகளின் இறுக்கத்தை சரி செய்யும். *மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்கும். *மாலை நேரத்தில் பொறுப்புகள் பெரும்பாலும் முடிந்திருக்கும் என்பதால், நிம்மதியான பயிற்சியில் ஈடுபடலாம்.

News May 8, 2024

ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை

image

நடப்பு கல்வியாண்டு முதல், வேளாண் பல்கலை., ஜெயலலிதா மீன்வளப் பல்கலை., அண்ணாமலை பல்கலை.யில் நடத்தப்படும் வேளாண் படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://tnagfi.ucanapply.com இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பொது ₹600, SC, ST ₹300 கட்டணம். விவரங்களுக்கு 94886 35077, 94864 25076, 04365 – 256430 என்ற எண்களில் அழைக்கவும்.

News May 8, 2024

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு

image

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது மே 10இல் தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான கெஜ்ரிவால், இடைக்கால ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் தரக்கூடாது என ED கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

News May 8, 2024

T20 தொடரில் 350+ விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

image

டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய 11 ஆவது வீரர் என்ற சாதனையை RR அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார். டி20 (ஐபிஎல்+சர்வதேசம்) போட்டிகளில் இதுவரை 350க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் விவரம் இதோ: பிராவோ (625),ரஷீத் (572), நரைன் (549), தாஹிர் (502), ஷகிப் (482), ரசல் (443),ரியாஸ் (413), மலிங்கா (390), தன்வீர் (389), ஜோர்டான் (368) சாஹல் (350).

News May 8, 2024

கோவிஷீல்டு கிட்ட வந்து மாட்டிக்கிட்டோம்

image

உலகளவில் பிரபலமான 2 கொரோனா தடுப்பூசிகள் Pfizer மற்றும் Moderna. ஆனால், இவற்றை இந்திய மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மாறாக AstraZeneca நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த ஊசிதான் பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் கோவாக்சின் & ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

News May 8, 2024

சென்னையில் மிதமான மழை பெய்யும்

image

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒருசிலப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மே 12ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 8, 2024

அதானியிடமிருந்து ராகுல் எவ்வளவு நிதி பெற்றார்?

image

அதானியிடமிருந்து தேர்தலுக்காக காங்கிரஸ் எவ்வளவு நிதி பெற்றது என்ற விவரத்தை ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கரிம்பூரில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அம்பானி, அதானி உள்ளிட்ட 5 தொழிலதிபர்களைப் பற்றி ராகுல் அடிக்கடி பேசுவார். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர்களைப் பற்றி பேசாமல் ஏன் திடீர் மௌனம் காத்து வருகிறார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 8, 2024

மே 11ஆம் தேதி வரை கனமழை பெய்யும்

image

தமிழகத்தில் மே 11ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 9ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 10ஆம் தேதி 9 மாவட்டங்களிலும், மே11ஆம் தேதி 7 மாவட்டங்களில் சில இடங்களிலும் கன மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, மே 13-14 வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News May 8, 2024

கொட்டுக்காளி ரிலீசுக்கு திட்டமிட்டு வரும் SK

image

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘குரங்கு பெடல்’ , ‘கொட்டுக்காளி’ போன்ற மிகத் தரமான பல படங்களைத் தொடர்ந்து தயாரிக்க வேண்டுமென விருப்பம் உள்ளது. சிறுவர்களை மையமாக வைத்து எடுத்த ‘குரங்கு பெடல்’ படத்தை திரைக்குக் கொண்டு வந்தார். அடுத்ததாக, பல சர்வதேச விருதுகளை வென்ற சூரி நடித்த கொட்டுக்காளி படத்தை 200 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் செய்ய, அவர் திட்டமிட்டுவருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!