India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கறிவேப்பிலையில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் B1, B2, C ஆகியவை அடங்கியுள்ளன. இதனுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. மேலும், கறிவேப்பிலையில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் ரத்த சோகை பிரச்னைகளை குறைக்கும். இனி உணவில் உள்ள கறிவேப்பிலையை தூக்கி எறியாமல், அதை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் லக்னோ அணி திணறி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கே.எல்.ராகுல் (29), டி கார் (2), மார்கஸ் ஸ்டோனிஸ் (3) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். லக்னோ அணி 12 ஓவரில் 70/4 ரன்களை எடுத்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமென்று ஏற்கெனவே கூறியுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசியின் வெளிப்படைத்தன்மையை நிறுவிட, த்ரோம்போசிஸ் & த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் உள்ளிட்ட பல அரிய பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருந்துடன் வைக்கப்பட்டிருந்த அச்சிடப்பட்ட எச்சரிக்கை குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கு எதிரான T20 போட்டியில் மங்கோலியா அணி மோசமான சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் JPN அணி, 217/7 ரன்கள் குவித்தது. 218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய MNG அணி, 12 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதன்மூலம் T20 வரலாற்றில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை மங்கோலியா பெற்றது. இதற்கு முன், 2005இல் IoM என்ற அணி ஸ்பெயினுக்கு எதிராக 10 ரன்களில் ஆல்அவுட்டானது.
நடிகர் விஜய் சேதுபதிக்கும் அவரது மகன் சூர்யாவுக்கும் இடையே ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சிக்கித் தவிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ், விடுதலை 2ஆம் பாகத்தின் அடுத்த ஷெட்யூலுக்காக அதிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், வேல்ராஜ் வந்தால்தான் நடிப்பேன் என்று சூர்யா அடம்பிடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய வரலாற்றில் முகலாயர்களையும் மாம்பழங்களையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். ‘மாம்பழங்களின் பொற்காலம்’ என வர்ணிக்கப்படும் முகலாயர்களின் ஆட்சியில்தான், பல புதிய மா ரகங்களை உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அந்த வகையில், முதிர்ச்சி பெற்ற மாமரத்தின் கிளைகளை வெட்டி, அதில் வேறு வகையான சிறு மா கன்றை ஒட்டி வளர்த்து, புதிய மாங்கனிகளை விளைக்கும் ‘ஒட்டு மா’ என்ற மர உருவாக்க முறை நடைமுறைக்கு வந்தது.
SRH அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் தன்னை பிளாக் செய்தது வேதனை அளித்ததாக DC வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். RR அணி வீரர் அஷ்வினுடனான உரையாடலில் வார்னர், இந்தத் தகவலைக் கூறியுள்ளார். அதே நேரத்தில், SRH அணியின் ரசிகர்கள் இன்னும் சமூக ஊடகங்கள் வழியே தன்னுடன் தொடர்பில் உள்ளனர் என்றும், இந்திய மக்கள் பாசிட்டிவ் மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அயலக அணி தலைவர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக, சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். இந்தியர்களின் நிறம் குறித்து, சமீபத்தில் அவர் கூறிய கருத்து சர்ச்சையானது. இதனால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக அவர் பேச்சுக்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஏர் இந்தியா ஊழியர்களுக்கும், அந்நிறுவன தலைமையான டாடா நிறுவனத்துக்கும் இடையேயான பிரச்சனை உச்சம் தொட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணைய உள்ளதாக செய்திகள் வந்ததால், ஏர் இந்தியா பணியாளர்கள், டாடாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இன்று, ஏர் இந்தியாவின் சுமார் 300 ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால் 80 விமானங்கள் ரத்தானது. ஊழியர்களிடம் டாடா பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.
இந்தியாவின் அடுத்த தசாப்த வளர்ச்சி, 2007 – 2012 வரையிலான சீனாவின் வளர்ச்சிப் பாதையை ஒத்திருக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்திருக்கிறது. அதன் அறிக்கையில், ”
பொருளாதார வளர்ச்சியில் நாட்டிற்கு பல சாதகமான நிலைமைகள் உள்ளன. புவிசார் அரசியல், ரியல் எஸ்டேட், டிஜிட்டல் மயமாக்கல், க்ரீன் எனர்ஜிக்கு மாறுதல், கடல்வழிப் போக்குவரத்து கட்டமைப்புகள் வளர்ச்சியைத் தூண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.