India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶ஜூன்- 20 | ▶ஆனி – 06
▶கிழமை: வியாழன் | ▶திதி: திரயோதசி
▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை
▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶எமகண்டம்: காலை 06:00 – 07:30 வரை
▶குளிகை: காலை 09:00 – 10:30 வரை
▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி
▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

2023-24 ஆம் நிதியாண்டில் 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஹென்லி & பார்ட்னர்ஸ் கணித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், “உலகளவில் சீனா, இங்கிலாந்து ஆகிய இருநாடுகளும் அடுத்தபடியாக இந்திய கோடீஸ்வரர்கள் அதிகளவில் புலம்பெயர்கின்றனர். இந்தாண்டு அவர்களில் பெரும்பாலோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தேர்வு செய்வார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னட சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கவுடா முகத்தை பயன்படுத்தி ‘டீப் பேக்’ ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான அவரது படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி, இது குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கண் துடைப்பு போராட்டத்தை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். தஞ்சாவூரில் பேசிய அவர், “திமுக கூட்டணிக்கு மக்களவையில் இப்போது 40 எம்.பி.,க்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறி, மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து, நீட் தேர்விற்கு விலக்கு பெற வேண்டும்” என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் உலக தரம் வாய்ந்த துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்களம் ஒன்றுகூட இல்லை என்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள பிரித்வி ராஜ் வேதனையுடன் கூடியுள்ளார். தமிழக அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள சிறந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், அப்படி நடந்தால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள வீரர்களாலும் சாதிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

வயல்வெளிகளில் வளரக்கூடிய சிறு செடி, ஓரிதழ் தாமரை. ‘ரத்தின புருஷ்’ என ஆயுர்வேதம் கொண்டாடும் இந்த முழுத் தாவரமும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. காயகற்ப மூலிகையான இதன் இலைகளைப் பறித்து (காலை வேளையில்), நன்றாகத் தண்ணீரில் கழுவி மைபோல அரைத்து, 200 மி.லி., பசும்பாலில் நெல்லிக்காய் அளவுக்குக் கலந்து, 48 நாள்கள் குடித்துவந்தால், உயிரணுக்கள் பலப்படுவதுடன், நரம்புத்தளர்ச்சி நீங்கி உடல் வலிமையும் பெறும்.

அதிவேக ரயில்களை விடுவது முக்கியமில்லை; அதில் பயணிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் முக்கிய என்று சசிகாந்த் செந்தில் எம்.பி., கூறியுள்ளார். மேற்கு வங்க ரயில் விபத்தில் இறந்த 10 உயிர்கள் பறிப்போனதற்கு பிரதமர் மோடிதான் முக்கிய காரணம் என்ற அவர், மோடியின் தலைமையிலான மத்திய பாஜக அரசின் அலட்சியம் & தொழிலாளர் விரோத செயல்பாடுகளே இப்போது மக்களுக்கு எமனாக மாறியுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஸைடஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பயோடக்ஸ் மருந்துக்கு நேபாள் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடைவிதித்துள்ளது. நேபாள் ஆய்வுக் கூடத்தில் பயோடக்ஸ் 1ஜிஎம் மருந்து பரிசோதிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளை அந்நிறுவனம் பின்பற்றவில்லை என்றும் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டால் அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.

*1248 – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. *1837 – விக்டோரியா பிரிட்டனின் பேரரசியாக முடிசூடினார். *1921 – வடசென்னையில் பக்கிங்காம், பி&சி மில் தொழிலாளர்கள் பணி நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். *1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை பெற்றது. *1990 – 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. *2003 – விக்கிமீடியா நிறுவனம் தொடங்கப்பட்டது. *2006 – கவிஞர் சுரதா மறைந்த நாள்.

சமந்தா, ஃபகத் பாசில், தீபிகா படுகோனே உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களுக்கு உள்ள நோயை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில், தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஸ்மைலிங் சின்ட்ரோம்’ என்ற அரிய வகையான சிரிக்கும் வியாதி தனக்கு இருப்பதாகக் கூறிய அவர், தான் சிரிக்க ஆரம்பித்தால் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன் என்றார்.
Sorry, no posts matched your criteria.