News May 9, 2024

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோலி அரை சதம்

image

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் கோலி அரைசதம் விளாசினார். தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. மறுமுனையில் விக்கெட் சரிந்த போதிலும் தொடக்க ஆட்டக்காரரான கோலி நிலைத்து நின்று, 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்

News May 9, 2024

ஹர்திக் பாண்டியா மீது வீரர்கள் கடும் அதிருப்தி?

image

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வென்ற MI அணி நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. இதற்கு கேப்டன்ஸி மாற்றம் & ஹர்திக் பாண்டியாவின் நடவடிக்கைகளே முக்கிய காரணமென்று அதிருப்தியில் உள்ள மற்ற MI வீரர்கள் கருதுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DC அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பாண்டியாவிடம் திலக் வர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

வேகத்தடை: மின்கம்பங்களை அகற்ற ஆணை

image

வேகத் தடை அருகிலுள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி, வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம், மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலைதடுமாறி, மின்கம்பங்கள் மீது மோதி 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவிட்ட நிலையில், அனைத்து அதிகாரிகளுக்கும் மின்வாரியம் ஆணையிட்டுள்ளது.

News May 9, 2024

PBKSvsRCB போட்டி நிறுத்தம்

image

நடைபெற்று வரும் பெங்களூரு, பஞ்சாப் இடையேயான ஐபிஎல் போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்று வரும் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 8.25 மணிக்கு போட்டி நிறுத்தப்படும்போது பெங்களூரு அணி 10 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரஜத் பட்டிதார் 55 ரன்களும், கோலி 42 ரன்களும் எடுத்துள்ளனர்.

News May 9, 2024

மக்களை மோடி மறந்துவிட்டார்

image

பிரதமர் பதவி கைவிட்டுப்போகும் என்ற பயத்தில் மோடி, பல்வேறு வித்தைகளை காட்டி வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறிய அவர், பிரதமரின் பொய் பரப்புரைகளை அடையாளம் கண்டு, மக்கள் மோடியை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மோடி மக்களுக்காக உழைப்பதை மறந்துவிட்டு அதானிக்காக சேவை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

News May 9, 2024

சன் டிவியில் மேலும் ஒரு சீரியல் நிறைவடைந்தது

image

சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா, பிரியமான தோழி ஆகிய சீரியல்கள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து அம்பிகா, லிவிங்ஸ்டன் மகள் ஜோவிகா உள்ளிட்டோர் நடிப்பில் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற அருவி சீரியலும் நிறைவடையவுள்ளது. வரும் 11ஆம் தேதியுடன் அந்த சீரியல் நிறைவடைகிறது. மேலும் வருகிற 13ஆம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு தினமும் ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

News May 9, 2024

விரட்டி விரட்டி கடித்த நாய்கள், 15 பேர் காயம்

image

பொன்னமராவதி அருகே இன்று ஒரே நாளில் 15 பேரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொக்கநாதபட்டியில், தெரு நாய்கள் அப்பகுதியில் சென்றவர்களை விரட்டி கடித்ததில் பலர் காயமடைந்தனர். சென்னையில் சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

News May 9, 2024

போராட்டத்தை வாபஸ் பெற்ற AIE ஊழியர்கள்

image

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AIE) ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். விஸ்தாரா ஏர்லைன்ஸுடன் AIE-ஐ இணைப்பதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் AIE நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 25 மூத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

News May 9, 2024

ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரும் காங்.

image

ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், ஆதலால் ஆட்சியில் நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்து விட்டதாகவும் கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹூ ஆலோசனை

image

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், சத்ய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நாளில் செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள், மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை கதவின் முன்பு, கூடுதலாக ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!