India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காகத்துக்கு காலையில் உணவு வைத்தால் தீராத கடன் தொல்லை தீரும். நட்புக்கு இலக்கணமாக பார்க்கப்படும் காகம், ஆன்மீகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சனி பகவானின் வாகனமாகவும், முன்னோர்களின் வடிவமாகவும் காகம் பார்க்கப்படுகிறது. அத்தகைய காகத்துக்கு காலை நேரத்தில் எழுந்ததும் வீட்டில் உணவு வைத்தால் தீராத கடன் தொல்லை நீங்கும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
பிரதமரின் கோவை ரோடுஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பாஜகவின் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் சீருடையில் அணிவகுத்து நின்றனர். அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், குழந்தைகள் நல சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனால், நேற்றிரவு முதலே நாடு முழுவதும் ஆங்காகே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயன்று வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலை தயாரித்து மேலிடத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அளித்தது. அதனடிப்படையில் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு பட்டியல் வெளியிட வாய்ப்பு இருப்பதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
பெண்களை மையமாக வைத்து வரும் படங்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “பெண்களை மையமாக வைத்து தற்போது அதிக படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்களும் வெற்றி அடைகின்றன. இதை காண்கையில் மகிழ்ச்சியளிக்கிறது. நமது மக்கள் அனைத்து வகையான படங்களையும் விரும்புவதையே இது காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஜி ஸ்கொயர் நிறுவன இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நீடிக்கிறது. 2022ஆம் ஆண்டில் டிவிஏசி நடத்திய சோதனையின் அடிப்படையில், புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது. இதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரலில் ஐ.டி. நடத்திய சோதனையின் அடிப்படையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
தலைக்காவிரியில் புறப்பட்டு தமிழகம் முழுவதும் செழிக்க வைக்கும் காவிரி, கடலில் சங்கமிக்கும் தொகுதி மயிலாடுதுறை. குடந்தை, பூம்புகார், பாபநாசம், மயிலாடுதுறை, சீர்காழி (த), திருவிடைமருதூர் (த) ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் திமுக கூட்டணி வசமுள்ளன. இதுவரை இங்கு நடந்த 17 தேர்தல்களில் காங். 9, அதிமுக 2, தமாக & திமுக தலா 3 முறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் திமுக 2,61,314 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.
பாஜகவின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம்பெறவில்லை. விளவங்கோடு எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால், அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்திருக்கிறது. என்ன செய்யப் போகிறார் விஜயதாரணி?
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கையை சர்வாதிகாரத்திற்கான போக்கு என்றும் ஜனநாயக படுகொலை எனவும் ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் விமர்சித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு நாட்டு மக்கள் போராட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர் கட்டு போன்ற சிறுநீரக பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் சுரைக்காய்க்கு உண்டாம். கோடையில் அதிகமாக கிடைக்கும் சுரைக்காயில் ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் இந்துப்பு, இஞ்சி, நெல்லி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிவிடவும். பின்னர் அதில் வடிகட்டிய சுரைக்காய் ஜூஸை ஊற்றி, சிறிது சீரகம் & மிளகு பொடியை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Sorry, no posts matched your criteria.