India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. மேலும் 90க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்ததால் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. தற்போது அந்த கிராமத்தில் இறுதிச்சடங்களுக்கு வேலை செய்வதற்கு கூட யாரும் இல்லை எனக் கூறி பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

விஷச்சாராயம் அருந்தி 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது வேதனையளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்த அனைவருமே மிகவும் ஏழ்மையானவர்கள் நிலையில் இருப்பவர்கள் என்று தெரிவித்த அவர், அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் விஷச்சாரய விற்பனையை தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். காவல் நிலையத்தின் பின்புறமே விஷச்சாரய விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரில் உள்ள படத்தை எப்படி மாற்றலாம் எனத் தெரிந்து கொள்வோம். அருகிலுள்ள இ-சேவை மையம் சென்று, விண்ணப்பத்தை பெற்று, ஆதார் எண் உள்ளிட்ட விவரத்தை நிரப்பியளிக்க வேண்டும். அதை சரிபார்த்த பிறகு, பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதியப்படும். பிறகு உங்களை படம் எடுத்து ஊழியர் பதிவேற்றம் செய்வார். விரல்ரேகை வைப்பதால் மொபைல் எண், அடையாள ஆவணம் தேவையில்லை. 90 நாள்களில் படம் மாறிவிடும்.

விஷச்சாராய விற்பனையை தடுக்கத்தவறிய காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். அதிகாரிகளின் துணை இல்லாமல் சாராய விற்பனையில் யாரும் ஈடுபட முடியாது என்று கூறிய அவர், தவறு செய்த அதிகாரிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும் என்றார். முழுமையான மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவதே இதற்கு சரியான தீர்வு எனவும் அவர் குறிப்பிட்டார்.

UGC-NET தேர்வைப்போல, 2024 NEET நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதவி பேராசிரியர் பணிகளுக்காக ஜூன் 18இல் நடத்தப்பட்ட UGC-NET தேர்வில் முறைகேடு நடந்ததால், அந்த தேர்வை நேற்று மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. இதேபோல, நடப்பாண்டு NEET தேர்விலும் குளறுபடி நிகழ்ந்துள்ளதால், அதனையும் ரத்து செய்துவிட்டு புதிய தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 60 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் திமுக ஆட்சி, தமிழகத்தை 40 ஆண்டுகள் பின்நோக்கி இழுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு செய்துள்ளது. விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 37 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உடனடி நிவாரணம் அளிக்க அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 A காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த ஜூலை 19 கடைசி. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தை (https://www.tnpsc.gov.in) காணலாம்.

பாஜக ஆட்சியில் முறைகேடுகள் தொடர்கதையாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மோடி ஆட்சியில் வினாத்தாள் கசிவு இயல்பாகி, அனைத்து தேர்வுகளிலும் பாஜக அரசின் முறைகேடுகள் அம்பலப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், UGC-NET தேர்வு ரத்து செய்யப்பட்டது போல நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர். நீட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணம் செய்துகொண்டு, தனது சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை என நடிகை சதா கூறியுள்ளார். ஜெயம், அந்நியன் போன்ற பல படங்களில் நடித்துள்ள சதா, 40 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து மனம் திறந்துள்ள அவர், தற்போது சுதந்திரமாக வாழ்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், மனதுக்கு பிடித்த நபர் இதுவரை கிடைக்கவில்லை, அவ்வாறு கிடைத்தால் அவரை திருமணம் செய்துகொள்வேன் எனவும் சதா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.