News June 20, 2024

உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த யோகாசனம்

image

*கோப்ரா போஸ், உங்கள் இதயம், நுரையீரல் மற்றும் செரிமானத்திற்கு நல்லது. இந்த யோகா ஆசனத்தைச் செய்வதன் மூலம் முதுகுவலி குறையும் என யோகா ஆசிரியர்கள் கூறுகின்றனர். *தனுராசனம் என்ற வில் போன்று வளைந்து செய்யப்படும் யோகாசனம், வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. *மவுண்டன் போஸ் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. *பிரிட்ஜ் போஸ் மன ஆரோக்கியத்திற்கும், தைராய்டு பிரச்னைகளுக்கும் நல்லது எனக் கூறுகின்றனர்.

News June 20, 2024

ஆப்கானிஸ்தான் அணிக்கு 182 ரன்கள் இலக்கு

image

டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 181 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா 8, கோலி 24, பண்ட் 20, டூபே 10, ஜடேஜா 7, அக்ஷர் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 53, பாண்டியா 32, ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. ரஷீத் கான், ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

News June 20, 2024

பூரண மதுவிலக்கே நிரந்தர தீர்வு

image

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே விஷச்சாராய கொடுமைகளைத் தடுக்க நிரந்தர தீர்வு என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விஷச்சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அவர், மெத்தனால் விநியோகத்தை கண்காணிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News June 20, 2024

இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் காலமானார்

image

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் சென்னையில் காலமானார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான இவர், அதிலிருந்து பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தொடங்கினார். பின்னர், அதிலிருந்தும் பிரிந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் தொடங்கி தலைவராக இருந்து வந்தார். தமிழ் தேசியவாதியான இவர், தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.

News June 20, 2024

அதிரடியாக அரை சதம் கடந்தார் SKY

image

டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிவரும் இந்திய வீரர் சூர்யகுமார் 27 பந்துகளில் அரை சதம் (53) அடித்துள்ளார். அரை சதம் அடித்த அடுத்த பந்திலே நபி பந்தில் ஃபாரூக்கியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தற்போது வரை 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இந்தியா எவ்வளவு ரன்கள் எடுக்கும் என நினைக்கிறீர்கள்?

News June 20, 2024

கள்ளக்குறிச்சி சம்பவம் வேதனை அளிக்கிறது: நீதிபதி

image

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறிய நீதிபதி, மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்றார். திண்டுக்கல் நகர் பகுதியில் 24 மணி நேர சட்டவிரோத மது விற்பனை தொடர்பான வீடியோ அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

News June 20, 2024

சென்னையில் பரவலாக மழை

image

சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பகல் பொழுதில் வெயில் வாட்டி எடுத்தாலும், இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தற்போது கோயம்பேடு, டி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், அசோக் நகர், வடபழனி, கே.கே.நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

News June 20, 2024

3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உருவம்

image

மொராக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெபல் இர்ஹவுட் எனப்படும் பழங்கால மனித எலும்பின் எச்சங்களிலிருந்து 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித மூதாதையரின் முகத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எலும்புகளை 3டி முறையில் ஸ்கேன் செய்து, ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித மூதாதையர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

News June 20, 2024

கர்நாடகாவில் கன்னடம் கட்டாயம்: சித்தராமையா

image

கர்நாடகாவில் வாழும் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டுமென, அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னட மொழி, நிலம், நீர் ஆகியவற்றைப் பாதுகாப்பது ஒவ்வொரு கன்னடர்களின் பொறுப்பு என கூறிய அவர், மாநிலத்தில் கன்னட சூழலை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் போல கன்னடர்களும் தாய் மொழியில் உரையாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News June 20, 2024

நாளை கடைசி: ரயில்வேயில் 1,010 பணியிடங்கள்

image

ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 1,010 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். Apprentices (கார்பெண்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், ஃபிட்டர், பெயிண்டர் உள்ளிட்ட பிரிவுகளில்) பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு, NCVT பயிற்சி. வயது வரம்பு: 15 – 24. விருப்பமுள்ளவர்கள் <>https://pb.icf.gov.in/ <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!