India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் (மே 10) மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர <
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப்க்கு செல்ல முடியாது. முதல் அணியாக மும்பை எலிமினேட் ஆன நிலையில், தற்போது பஞ்சாப் எலிமினேட் ஆகியுள்ளது. இன்று CSKக்கு எதிரான போட்டியில் தோற்கும் பட்சத்தில் குஜராத் அணியும் வெளியேறும்.
* 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
* இன்று (மே 10) அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது.
* இன்று முதல் சட்டப்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்
* ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* குரூப் 2 தேர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.
ஐபிஎல்லில் குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் தோற்றால் GT அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதுவரை இரு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் CSK 6 வெற்றிகளுடன் 4ஆவது இடத்திலும், GT 4 வெற்றிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெட்டிசன்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் புகைப்படங்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். அந்தவகையில், மார்வெல் கெட்டப்பில் இருக்கும் தமிழ் நடிகர்களின் புகைப்படங்களை நெட்டிசன்கள் இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதில் இருக்கும் நடிகர்கள் யார் என கண்டறிந்து கமெண்ட் பண்ணுங்கள்.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்கை சிறப்பு விசாரணைக்கு குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கக்கூறி DGPக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவ்வழக்கு குறித்த செய்திகள் மனவருத்தத்தை கொடுப்பதால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக இதில் முதலில் ஆடிய 6 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று 5 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையில் இருந்தது. ஆனால், கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் 2 தோல்வி மற்றும் 4 தொடர் வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது. இந்த தொடர் வெற்றியால் RCB ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
▶மே – 10, சித்திரை – 27 ▶கிழமை – வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30PM – 5:30PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை நேரம்: 7:30 AM – 9:00 AM ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: த்ரிதியை
நேற்று சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர், 10 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்ததாகவும், எண்ணங்கள் முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொளுத்தும் வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள். தாகமாக இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பழச்சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களையும் அதிகமாகக் கொடுக்கலாம். குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றால், பருத்தியாலான ஆடைகள், தொப்பி, கண்ணாடி போன்றவற்றை அணிவியுங்கள்.
Sorry, no posts matched your criteria.