India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities, Denotified Tribes என 2 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டதை ஆய்வு செய்து, ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 48,044 பேர். மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள் 2.63 கோடி.
தமிழகத்தில் மக்களவை & சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை ECI வெளியிட்டுள்ளது. அதிமுக(1), மநீம(2) ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 27 பேரின் பெயர்கள் இதில் இடம்பிடித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத இவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது
தமிழிலில் ஜி.வி. பிரகாஷை வைத்து புதிய படத்தை இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கவுள்ளார். கேங் ஆப் வாசிப்பூர் உள்பட இந்தியில் பல படங்களை எடுத்துள்ள அவர், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாகவும், விஜய்யின் லியோ படத்தில் சிறிய பாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர், பான் இந்தியா அளவில் ஜி.வி. பிரகாஷை வைத்து படமெடுக்க இருக்கிறார். மே மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாமகவை தங்கள் கூட்டணி பக்கம் இழுக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த சி.வி.சண்முகம், விருப்ப தொகுதிகளை தர தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் (3 மணி) வெளியாக இருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் தேதிகளை வெளியிட இருக்கிறார். வேட்புமனு தாக்கல், வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணும் தேதிகள் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றன. உலகின் மாபெரும் தேர்தலுக்கு தயாரா மக்களே?
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களவைத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ? என்கிற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் & இபிஎஸ் ஆகிய இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில், சின்னம் தொடர்பாக இதுவரை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று அறிய முடிகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய பரோடா அணி முன்னாள் வீரரான சமர்ஜித்சிங் கெய்க்வாட், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதி ஆவார். பரோடா சமஸ்தான மன்னரான ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் மகனான இவர்,1987-89 வரை துவக்க வீரராக விளையாடியதோடு, அதன்பிறகு பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு, 2012ல் மன்னராக பதவியேற்றதன்மூலம், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியானார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். எனினும் வரும் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் எம்.பி., விஜயகுமார் பாஜகவில் இணைந்துள்ளார். குமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ஒருங்கே கொடுத்தார் ஜெயலலிதா. ஜெ., மறைவுக்கு பிறகு EPS- OPS என அணிகள் பிரிந்தபோது, இவர் இபிஎஸ் அணியில் இருந்தவர். அவரைத் தொடர்ந்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கமும் பாஜகவில் இணைந்தார்.
Sorry, no posts matched your criteria.