India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகக் கூறி, அமைச்சர் TRB ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 2 & 3-வது இடங்களில் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. 4-வது இடத்தை கர்நாடகா & டெல்லி ஆகியவை பகிர்ந்து கொள்கின்றன.
ஆகாஷ் ஒரு எமோஷனலில் பொதுவெளியில் போட்டுடைத்துவிட்டார் என்று அவரது அக்கா கூறியுள்ளார். இங்கி.,க்கு எதிரான டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு, தனது அக்கா கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ச்சிபொங்க பேசினார் ஆகாஷ் தீப். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அவரது அக்கா, தீப் என் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறி நெகிழ்ந்துள்ளார்.
‘Chikitu’ என்ற ‘கூலி’ படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. எனவே, அடுத்தடுத்து அப்டேட்ஸ்களை வழங்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அந்தவகையில், 2-வது பாடல் விரைவில் ரிலீஸாகவுள்ளதாம். இது நாகர்ஜுனா – பூஜா ஹெக்டே இடம்பெறும் பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இப்படம் ஆக.14-ல் திரைக்கு வருகிறது.
கடலூரில் பள்ளி <<16987572>>வேன் மீது ரயில் மோதிய விபத்தில்<<>> அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முதலில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சொந்த வீடு கட்டியோ அல்லது வாங்கியோ குடியேற வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இது சிலருக்கு நிறைவேறாத கனவாகவே இருக்கும். அதற்கு அவர்களது சொந்த ஜாதகத்தில் செவ்வாய் கெட்டு இருப்பது தான் காரணம் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஆகையால் செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதமிருந்து செவ்வாய்க்கு அதிபதி ஆன முருகனை வழிபட்டு வந்தால் 9 வாரத்தில் நல்லது நடக்கும் என்கிறார்கள்.
ஏவுகணைகளை வைத்து தாக்கும் இக்காலத்திலும், இந்தியாவின் BSF-ல் ஒட்டக படை உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத ராஜஸ்தானின் தார் பாலைவன எல்லையில் இந்த வீர ஒட்டகங்கள் 24×7 ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. 1965-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரிலும் இவை பங்கேற்றுள்ளன. தற்போது 1,200 ஒட்டகங்கள் BSF-ல் உள்ளன. 1976 முதல் குடியரசு தின அணிவகுப்பில், இந்த வீர ஒட்டகங்கள் வண்ணமய ஆடைகளுடன் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.
கடலூரில் நிகழ்ந்த விபத்துக்கு ரயில்வே கேட்டில் Interlock இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக ‘Non Interlocking’ ரயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் அளிக்கப்படும். இவ்வாறு தகவல் கொடுக்கப்பட்டு கேட் மூடப்பட்டது உறுதியான பின்பே ரயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும். ஆனால், விபத்து நடந்த இடத்தில் சிக்னல் அளித்த பின்பு வேனுக்காக மட்டுமே கேட் திறக்கப்பட்டதாக தகவல்.
<<16987125>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதியதில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நிவாஸ், சாருமதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்து ICU-வில் உள்ள 3 மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை நேரில் சென்று உதவி, ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இங்கி.,ல் உள்ள விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைக் கண்ட போட்டோஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த போட்டோவைப் பகிர்ந்து ஸ்டார் டென்னிஸ் பிளேயர் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார். இது கோலியின் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதேநேரம், அங்கு டெஸ்ட் தொடர் நடைபெற்று வருவதால், அதனைக் காண விராட் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் <<16987572>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.