India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். இது தொடர்பாக ICC வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஒருநாள் மற்றும் T20 உலகக் கோப்பை தொடர்களில், இதுவரை 52 போட்டிகள் விளையாடியுள்ள ஸ்டார்க், 95 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார். 2 மற்றும் 3ஆவது இடங்களில் மலிங்கா, ஷகிப் அல் ஹசன் உள்ளனர்.

ஜூலை 1ஆம் தேதி அமலாக உள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி, பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில் 146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்த சம்பவம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

விஷச்சாராயத்தை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில், இப்போது வரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனியும் மரணங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற கில்கிறிஸ்டின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். 2007இல் 9 கேட்சுகளைப் பிடித்து அதிக கேட்ச் பிடித்த கீப்பர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் படைத்திருந்தார். அந்த சாதனையை நேற்றைய ஆஃப்கனுக்கு எதிரான போட்டியில் 3 கேட்சுகளைப் பிடித்ததன் மூலம், ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். அவர் இதுவரை 10 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லையில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமின் வழங்கப்பட்டது. இன்று சிறையில் இருந்து வெளிவருவார் என கருதப்பட்ட நிலையில் ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சர்வாதிகாரம் அதன் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டதாக அவரது மனைவி சுனிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை தீவிரவாதி போல் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் பட்டம் பெறும் இந்திய, சீன மாணவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான க்ரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், திறமையான மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதை தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என இயக்குநர் கௌதமன் வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார். இனியும் இது போன்றதொரு துயரம் நடக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை காப்பாற்றும் உதயசூரியன் உள்ளிட்ட 2 திமுக எம்எல்ஏக்களை கைது செய்ய வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பு என்ற அவர், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் BPL ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் மத்திய அரசின் சலுகைகள்.
*ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தில் ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை
*அனைவருக்கும் வீடு திட்டத்தில், வீடு கட்ட ₹1.20 லட்சம் மானியம்.
*உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர், அடுப்பு வழங்கப்படும்.
*கைவினைக் கலைஞர்களுக்கு ₹3 லட்சம் வரை கடனுதவி. *அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் இலவச ரேஷன்.
Sorry, no posts matched your criteria.