News March 16, 2024

இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?

image

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களவைத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ? என்கிற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் & இபிஎஸ் ஆகிய இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில், சின்னம் தொடர்பாக இதுவரை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று அறிய முடிகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

News March 16, 2024

ரூ.20,000 கோடி சொத்து வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்

image

ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய பரோடா அணி முன்னாள் வீரரான சமர்ஜித்சிங் கெய்க்வாட், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதி ஆவார். பரோடா சமஸ்தான மன்னரான ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் மகனான இவர்,1987-89 வரை துவக்க வீரராக விளையாடியதோடு, அதன்பிறகு பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு, 2012ல் மன்னராக பதவியேற்றதன்மூலம், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியானார்.

News March 16, 2024

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். எனினும் வரும் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

News March 16, 2024

BIG BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்

image

அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் எம்.பி., விஜயகுமார் பாஜகவில் இணைந்துள்ளார். குமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ஒருங்கே கொடுத்தார் ஜெயலலிதா. ஜெ., மறைவுக்கு பிறகு EPS- OPS என அணிகள் பிரிந்தபோது, இவர் இபிஎஸ் அணியில் இருந்தவர். அவரைத் தொடர்ந்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கமும் பாஜகவில் இணைந்தார்.

News March 16, 2024

100 நாள் வேலை ஊதியம் ₹400ஆக உயர்த்தப்படும்

image

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ₹400 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் கார்கே, “அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டங்கள் & தொழிலாளர்களின் சுகாதார உரிமை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் போல நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

News March 16, 2024

நினைவு பரிசாக உடைந்த கண்ணாடி

image

WPL எலிமினேட்டர் போட்டியில் மும்பையை வீழ்த்தி ஆர்சிபி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டிக்குப் பின் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரிக்கு டாடா நிறுவனம் புதுமையான பரிசை வழங்கியுள்ளது. UP வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில், ​​பெர்ரி அடித்த சிக்ஸர் பரிசாக வழங்க நிறுத்தப்பட்டிருந்த டாடா காரின் கண்ணாடியை உடைத்தது. உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒன்றாக சேர்த்த கண்ணாடி அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

News March 16, 2024

“ஆளுநரின் ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்படும்”

image

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார். தேர்தலுக்குப் பின் அவரது ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்படும் என அமைச்சர் ரகுபதி காட்டமாக பேசியுள்ளார். மேலும், அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும் பதவியேற்பு விழா கண்டிப்பாக நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

News March 16, 2024

“கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும்”

image

கூட்டணி குறித்த முடிவை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கூட்டணி குறித்து யூகத்தின் அடிப்படையில் பல செய்திகள் வெளியாகிறது. கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது’ எனத் தெரிவித்துள்ளது.

News March 16, 2024

BREAKING: ” தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்”

image

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 16, 2024

தமிழக மீனவர்கள் ‘இந்தியர்கள்’ இல்லையா?

image

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதையும், சித்ரவதை செய்யப்படுவதையும் பாஜக அரசு ஏன் தடுத்து நிறுத்தவில்லை. அதானியின் வர்த்தக நலனுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த பாஜக அரசு, மீனவர்களுக்காக ஏன் இதுநாள் வரை அழுத்தம் கொடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!