News June 22, 2024

மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

image

T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய USA, 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 129 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய WI, 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய WI வீரர், ஷாய் ஹோப் 39 பந்துகளில் 82 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

News June 22, 2024

பாடம் நடத்த மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறை

image

அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த வகுப்பறைகளை பயன்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், சரியான கால அட்டவணை தயாரித்து, வகுப்பறைகளை பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அத்துடன், இதற்காக ஒரு ஆசிரியரை நியமிக்குமாறும், கற்றல், கற்பித்தலுக்கு மட்டுமே இதனை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 22, 2024

தண்ணீர் கேட்டு உண்ணாவிரதப் போராட்டம்

image

தலைநகர் டெல்லியில், குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. காலிக் குடங்களுடன் அரசியல் கட்சிகள் போராடுவதால் அங்குள்ள சூழல் போர்க்களமாகியுள்ளது. இந்த நிலையில், ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு உரிய நீரை வழங்க வலியுறுத்தி, ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News June 22, 2024

பத்திரப் பதிவில் கைரேகை சரிபார்க்கும் வசதி அமல்

image

சொத்து பரிமாற்றத்தில் ஆள் மாறாட்டத்தை தடுக்க விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய நடைமுறையை பதிவுத்துறை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு சொத்து பத்திரம் பதிவுக்கு வரும் போது, விற்பவரின் கைரேகை, அதன் முந்தைய பதிவின்போது பெறப்பட்டதுடன் ஒத்துப்போனால் மட்டுமே புதிய பதிவு மேற்கொள்ளப்படும். இதில், வேறுபாடு இருந்தால், தற்போது தாக்கல் செய்யப்படும் பத்திரம் நிராகரிக்கப்படும்.

News June 22, 2024

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு

image

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 14ஆம் தேதி நிலவரப்படி, 2.9 பில்லியன் டாலர் சரிவை சந்தித்தது. இது இந்திய மதிப்பில் ₹24,400 கோடி ஆகும். இதன்படி தற்போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ₹54.48 லட்சம் கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு ₹35,000 கோடி அதிகரித்து ₹54.73 லட்சம் கோடியாக புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

News June 22, 2024

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 98 இந்தியர்கள் பலி

image

சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை, இஸ்லாமியர்கள் தங்களது வாழ்வின் முக்கிய கடமையாக கருதுகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டு ஹஜ் யாத்திரை சென்று பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதியில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டுவதால் வீசும் வெப்ப அலையினாலும், வயது மூப்பினாலும் இவர்கள் பலியானதாக, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

News June 22, 2024

மேற்கிந்திய தீவுகளுக்கு 129 ரன்கள் இலக்கு

image

T20 WC சூப்பர் 8 ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 129 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அமெரிக்கா. டாஸ் வென்ற WI பந்துவீச்சை தேர்வு செய்ததால் USA முதலில் பேட்டிங் செய்தது. அனைத்து வீரர்களும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 19.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் 29, நிதிஷ் குமார் 20 ரன்கள் எடுத்தனர். WI தரப்பில் ரஸ்ஸல், சேஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

News June 22, 2024

விஜய் 50வது பிறந்தநாள்

image

திரைத்துறையில் பன்முகக் கலைஞராக விளங்கும் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை, அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. குறிப்பாக, இளம்பெண்களின் கனவு நாயகனாக இருப்பவர்களில் விஜய் தான் இன்றும் டாப். பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்-க்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

News June 22, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை கொட்டும்

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லுங்கள்.

News June 22, 2024

போட்டித் தேர்வில் முறைகேடு: ₹1 கோடி வரை அபராதம்

image

தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுப்பதற்கான புதிய சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் NEET, UGC போன்ற முன்னணித் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க, பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடியாளர்களுக்கு 5-10 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

error: Content is protected !!