India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைகளுக்கு, அக்டோபரில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஹேமந்த் சோரன் கைது, காஷ்மீரில் 370 பிரிவு ரத்து போன்ற காரணங்களால், இந்த 4 மாநிலங்களிலும் பாஜக நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த வெற்றியை பொறுத்தே என்டிஏ, இண்டியா அணிகளின் பலம் தெரியவரும்.

தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 3 நாள்களில் 876 பேரை கைது செய்துள்ளதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க,
தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில், 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 861 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக, காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு இருக்கும் நெருக்கடியை சட்டப்பேரவையில் காட்டக் கூடாது என அதிமுக எம்எல்ஏக்களை, சபாநாயகர் அப்பாவு எச்சரித்தார். சட்டப்பேரவை கூடியவுடன், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை கண்டித்த சபாநாயகர், கேள்வி நேரம் முடிந்த பிறகு அதுகுறித்து விவாதிக்க அனுமதி வழங்குவதாகக் கூறினார். இதனால், அதிமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

மக்கள் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை மக்களிடம் பரப்புவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது என்றார். மேலும், விஷச்சாராயம் அருந்தியவர்கள் தாமதமாக வந்ததால் தான் உயிரிழந்ததாக கூறுவது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரன் ₹640 வரை கடுமையாக உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹680 குறைந்து ₹53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ₹85 குறைந்து ₹6,695க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹2.00 குறைந்து கிராம் ₹96.50க்கும், கிலோ ₹96,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். 3ஆம் நாள் கூட்டம் இன்று கூடிய உடன், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்து, இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏ.க்கள் அனைவரும் பேரவைக் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. தொடர்ந்து, இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ஜூன் 24, 25, 26ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2வது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளனர்.

முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததால் யுஜிசி-நெட் 2024 தேர்வு கடந்த 19ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், 2024 பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட வரம்பிற்குள் யுஜிசி-நெட் 2024 தேர்வு கொண்டு வரப்படவில்லை. இதனால் அதில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானோர் இந்த சட்டத்தின்கீழ் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்.

நடப்பு T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து அமெரிக்க அணி வெளியேறியுள்ளது. லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய அந்த அணி, சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. இதனால், அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் ரேஸிலிருந்து முதல் அணியாக USA வெளியேறியுள்ளது. இதனிடையே அமெரிக்க அணி பங்கேற்ற இந்த T20 தொடர் தான், அந்த அணியின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி.
Sorry, no posts matched your criteria.