India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

PAK-க்கு 19% வரியை மட்டுமே விதித்துள்ள USA, இந்தியாவுக்கு 50% வரியை விதித்துள்ளதாக RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சித்துள்ளார். வரி விதிப்பில், PM மோடி – டிரம்ப் நட்பு எங்கே என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதனால் எளிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 1971-ல் Indo-Pak போரின் போது PAK-க்கு சாதகமாக USA செயல்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறியுள்ளார்.

ECI-யிடம் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதேசமயம் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் 2026 தேர்தலுக்காக பதிவு செய்த கட்சிகள், நாளை முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என ECI தெரிவித்துள்ளது.

அதிமுகவில் EPS மகனின் தலையீடு இருப்பதாக சமீபத்தில் செங்கோட்டையன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், வேறு குற்றச்சாட்டு இல்லாததால் அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறது என செங்கோட்டையன் கூறுவதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், தனது மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.

ஆண்களுக்கு வழுக்கை தலை பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. சிலர் மட்டுமே இதனை வருத்தமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். பலரும் இதற்காக பெரும் கவலை அடைகின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வழுக்கைத் தலையுடன் உள்ள ஆண்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்று தெரியுமா? மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியா இருக்கா, இல்லையா?

22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் தாறுமாறாக ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹560 உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,480-க்கும், 1 சவரன் ₹91,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில நாள் முன்பு, JeM உடன் தொடர்புடைய டாக்டரான அடில் ராதர் உ.பி.,-யில் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ஹரியானாவில் மற்றொரு டாக்டரான முஸம்மில் ஷகில் என்பவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 360Kg வெடிபொருள், AK47 துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 20 டைமர்களை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக EPS குற்றஞ்சாட்டியதற்கு, அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, நவ.15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ., மாதத்திற்கான கோதுமையை இதுவரை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள், 15-ம் தேதிக்கு பின் ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்க கோதுமை வாங்கியாச்சா?

சினிமா பாடலை அரசியலுக்கு பயன்படுத்துவது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யின் ‘தளபதி கச்சேரி’ பாடலில் அரசியல் வரிகள் இடம்பெற்றுள்ளது ஆச்சரியமான விஷயம் இல்லை என தெரிவித்த அவர், தனியாக விஜய் எப்படி திமுகவை வீழ்த்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். பாடலில் ஒன்னா சேரு, ஒன்னா சேரு என கூறும் அவர், யாருடன் இணையப் போகிறார் என்றும் கேட்டுள்ளார்.

USA டெக்சாஸில், ஆந்திராவை சேர்ந்த 23 வயது மாணவி ராஜ்யலட்சுமி தனது அப்பார்ட்மெண்ட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருந்த ராஜி, கடந்த சில நாள்களாக கடும் சளி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இணையத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

இந்தியா, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சில நகரங்களில் காற்றின் தரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்தாலும், சில நகரங்களில் காற்று சுத்தமாகவும் சுவாசிக்க பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. எந்தெந்த நகரங்கள் சுத்தமான காற்றுடன் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.
Sorry, no posts matched your criteria.