India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிராமங்களில் மக்கள் உணவுப் பொருட்களை எளிதாக பெறும் வகையில், ₹60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும். 5,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இணையம் மூலம் தானியங்கி ஆன்/ஆப் இயக்க அமைப்புகள் நிறுவப்படும். மேலும், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள் ₹100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில், இந்திய பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரின் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு வங்கதேசம் மிகவும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்றைய டி20 உலகக்கோப்பையில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதவுள்ளதை குறிப்பிட்ட அவர், இரு அணிகளுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் முறையான வழிமுறைகளை பின்பற்றி, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார். மேலும், வீதிகளில் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டால் முதல்முறை ₹5000, மறுமுறை பிடிபட்டால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கம்போடியாவின் அங்கோர்வார் வாட்டில் உள்ள விஷ்ணு கோயில், 16.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. உலகிலேயே இக்கோயில்தான் மிகப்பெரிய இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து 2வது பெரிய கோயிலாக அமெரிக்காவில் உள்ள சுவாமிநாராயண் அக்சார்தாம் கோயிலும் ( 6.55 லட்சம் சதுர மீட்டர்), 3ஆவது மிகப்பெரிய கோயிலாக ஸ்ரீரெங்கம் கோயிலும் (6.31 லட்சம் சதுர மீட்டர்) கருதப்படுகிறது.

நகர்ப்புறங்களில் சுற்றித் திரியும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல்முறை ₹5000, 2ஆம் முறை ₹10000 அபராதம் விதிக்கப்படும் என்றார். இதே நிலை தொடர்ந்தால் மாடுகள் ஏலம் விடப்படும் எனவும் எச்சரித்தார்.

இந்திய அணி கேப்டன் ரோஹித், கோலி ஆகியோர் பிசிசிஐயின் “ஏ பிளஸ்” பிரிவு பட்டியலில் உள்ளனர். அதன்படி அவர்களுக்கு ஆண்டுக்கு ₹7 கோடி சம்பளம் வழங்கப்படும். ஐபிஎல்லில் மும்பை அணியால் ரோஹித் ₹16 கோடிக்கும், ஆர்சிபி அணியால் கோலி ₹15 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். கோலிக்கு ₹770 கோடிக்கும், ரோஹித்துக்கு ₹183 கோடிக்கும் சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

பேரூராட்சிகளில் ₹220 கோடியில், 300 கி.மீ. தூரத்திற்கு மண்சாலைகள், தார்சாலை, கான்கீரிட் மற்றும் பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும். ₹125 கோடியில், 15 பேரூராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் ₹75 கோடியில் புதிய மாமன்ற கூடமும், ₹18 கோடியில், 15 இடங்களில் மழைநீர் தொட்டிகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களை சேர்க்க, கடந்தாண்டு ஜூலை 23 கடைகள் திறக்கப்பட்டன. அந்த விடுமுறையை ஈடுசெய்ய, கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை 4ஆவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு பும்ரா கடவுள் கொடுத்த பரிசு என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவராக பும்ரா இருப்பதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்பதை மற்றவர்களுக்கு சூர்யா குமார் யாதவ் பாடம் நடத்தி வருவதாகவும் பாராட்டினார். இருவரும் ஆஃப்கானுக்கு எதிரான போட்டில் சிறப்பாக விளையாடினார்கள்.

மக்கள் நலனுக்காக திமுகவுடன் 250 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டாலும், அதில் எவ்வித தவறும் இல்லை என செல்வப்பெருந்தகை அதிமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதை அதிமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, அரசை விமர்சிக்க கூடாது என திமுகவுடன் 25 ஆண்டுகள் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டுள்ளதாக இபிஎஸ் விமர்சித்தது நினைவுகூரத்தக்கது.
Sorry, no posts matched your criteria.