News June 22, 2024

3,000 ரன்களை கடந்த முதல் வீரர்

image

உலகக் கோப்பை போட்டிகளில் (ஒருநாள், டி20) 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் அவர் 69 உலகக் கோப்பை போட்டிகளில் (67 இன்னிங்ஸ்) 3,002 ரன்கள் குவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் கோலி 1,207 ரன்களை எடுத்திருக்கிறார்.

News June 22, 2024

முழு ஹெல்மெட் பயன்படுத்துங்க

image

இரு சக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற அரசின் உத்தரவுக்குப் பின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்திருக்கின்றன. ஆனால், இன்னும் பலர் தலையை மட்டும் மறைக்கும் ஹெல்மெட்களை பயன்படுத்துகின்றனர். அவை இரு சக்கர வாகனங்களுக்கானது அல்ல. விபத்து நேரத்தில் அவை கழன்றுவிடும். தலையையும் முகத்தையும் முழுவதுமாக மூடும் ஹெல்மெட்கள்தான் பாதுகாப்பானவை என்கின்றனர் போக்குவரத்து போலீசார்.

News June 22, 2024

NEET-PG தேர்வு ஒத்திவைப்பு

image

நாளை நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வுகளை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியானதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன் NTA தலைவர் மாற்றப்பட்ட நிலையில் புதிய தலைவர் தேர்வினை ஒத்தி வைத்திருக்கிறார்.

News June 22, 2024

விஜய் சேதுபதி ஒரு சிறந்த நடிகர்

image

விஜய் சேதுபதி சினிமாத்துறையில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என பாலிவுட் நடிகை கத்ரினா கைப் பாராட்டியுள்ளார். கடந்த ஜனவரியில் வெளியான ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்திப் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்படத்தில் இருவரது நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் கூறியுள்ளார்.

News June 22, 2024

24 மணி நேரமும் கள்ளச்சாராயம் டோர்டெலிவரி?

image

கள்ளச்சாராய விற்பனை குறித்து பிபிசி நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், டாஸ்மாக் மதுவின் விலை அதிகமாக இருப்பதால், விலை குறைவான கள்ளச்சாராயத்தை நோக்கி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதும் சாராயம் கிடைப்பதாகவும், டோர்டெலிவரி வசதியும் உண்டு எனவும் அப்பகுதி பெண்கள் கூறியுள்ளனர்.

News June 22, 2024

NTA தலைவர் அதிரடி மாற்றம்

image

நீட் முறைகேடு எதிரொலியாக தேசிய தேர்வு முகமை (NTA) தலைவர் சுபோத்குமார் சிங் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்த பிரதீப் சிங் கரோலா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுபோத்குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் நீட் முறைகேடுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றப்பட்டுள்ளார்.

News June 22, 2024

மருந்துகளுக்கான ஆதாரத்தை வெளியிடத் தயாரா?

image

கடந்த 20 ஆம் தேதி மருத்துவமனையில் எவ்வளவு விஷ முறிவு மருந்துகள் இருந்தன என்ற ஆதாரத்தை வெளியிடத் தயாரா என தமிழக அரசிற்கு இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தான் குற்றம் சாட்டிய பின்னர் Fomepizole மருந்துகளை தமிழக அரசு வாங்கியதாகக் கூறியுள்ள அவர், பிரச்சனையை திசை திருப்பி உண்மைகளை மூடி மறைப்பதாகவும் சாடியுள்ளார். மேலும், விவாதத்தை விடுத்து உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட அரசை வலியுறுத்தியுள்ளார்.

News June 22, 2024

வங்கதேசம் அணிக்கு மிகப்பெரிய இலக்கு

image

டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய பாண்டியா 50*, விராட் கோலி 37, பண்ட் 36, டூபே 34 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து வங்கதேசம் அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் தரப்பில் ஹுசைன், தன்ஷிம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.

News June 22, 2024

கள்ளச்சாராய வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது

image

ஆத்தூர் அருகே கள்ளச்சாராயத்தை விற்பனைக்கு கொண்டு சென்ற அதிமுக முன்னாள் நிர்வாகி கல்லாநத்தம் சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், சுரேஷ் குமாரிடமிருந்த 40லி சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்

News June 22, 2024

கள்ளச்சாராயம் மனிதர்களுக்கு விஷமாவது எப்படி?

image

சாராயம் காய்ச்சும்போது மெத்தனால் (விஷம்), எத்தனால் (போதைப் பொருள்) இரண்டுமே உருவாகும். வெப்பநிலையை 64.7 டிகிரி செல்சியசுக்கு மேல் வைத்துவிட்டால் மெத்தனால் ஆவியாகிவிடும். தொழிற்சாலைகளில் இந்த வெப்பநிலை முறையாக கண்காணிக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், வெப்பநிலையை கவனிக்காமல் விட்டுவிட்டால் மெத்தனால் அதிகமாகி குடிப்போருக்கு விஷமாகி விடுகிறது.

error: Content is protected !!