India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கர்நாடகாவின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரது இளைய சகோதரரும், கர்நாடகாவின் எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக சேத்தன் (27) என்பவர் அளித்த புகாரில் ஹோலேநரசிபுரா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

‘ஒரு நாள் கூத்து’ மற்றும் ‘ஃபர்ஹானா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன், அடுத்ததாக நடிகர் அதர்வா முரளியை வைத்து ‘டிஎன்ஏ’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ‘சித்தா’ படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

இன்று (ஜூன் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட சலேஹா குரேஷி (24) என்ற கர்ப்பிணி பெண், போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலரை கொலை செய்த வழக்கில், போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் குரேஷி. வழக்கமான பரிசோதனைக்காக அவரை ஹமிடியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சிறைக் காவலரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத்குமார் சிங் இன்று பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று (ஜூன் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

நடப்பு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மெகா வெற்றியை பதிவு செய்தது. இதனால், அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த போட்டியில், 27 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

*கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு *நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு *₹60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும் என அரசு அறிவிப்பு *டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

கள்ளச்சாராயத்தில் மட்டுமல்ல, உணவகங்களில் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகள், குளிர்பானங்கள், கார்பன் கலந்த பானங்களிலும் மெத்தனால் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவின் சுவையைக் கூட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட அளவில் மெத்தனால் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதன் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 5 மில்லி லிட்டருக்கும் குறைவாக இருப்பதால், அவை நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

T20 WCயில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தியா நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய வ.தேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் நஜ்முல் 40, தன்ஷித் 29, ரஷித் ஹொசைன் 24 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். குல்தீப் 3, பும்ரா, அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Sorry, no posts matched your criteria.