India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையிலும் 96.20% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 91.77%, தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 97.43% தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகளில் 91.93%, பெண்கள் பள்ளிகளில் 93.80%, ஆண்கள் பள்ளிகளில் 83.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், பாடவாரியாக சதமடித்த மாணவர்கள் விவரம் வருமாறு, தமிழ் – 8 பேர் சதம் எடுத்துள்ளனர். ஆங்கிலம் – 415 பேர், கணிதம் – 20,691 பேர், அறிவியல் 5,104 பேர், சமூக அறிவியல் – 4,428 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
* தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் 96.85%
* ஆங்கிலம் 99.15%
* கணிதம் 96.78%
* அறிவியல் 96.72%
* சமூக அறிவியல் 95.74%
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,47,061 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 4,22,591 (94.53% ) பேர், 4,47,203 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 3,96,152 (88.58%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,94,264 ஆகும். இதில், 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.016% தேர்ச்சி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவர்கள் dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இதில், நடிகர் அஜித் 3 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க உள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய 10 விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லி, மும்பை, கோவாவில் இருந்து சென்ற விமானங்கள் சென்னையில் தரையிறங்கின. தொடர்ந்து, இன்று அதிகாலை வானிலை சீரடைந்ததும், 10 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன.
பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், PBKS வீரர் ஹர்ஷல் பட்டேல் அபாரமாக பந்து வீசியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய அவர் 38 ரன்கள் கொடுத்து, கேமரன் க்ரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான (20) பர்பிள் கேப்பை கைப்பற்றியுள்ளார். 18 விக்கெட்டுகள் கைப்பற்றி பும்ரா 2ஆம் இடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.