India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 91.55%ஆக அதிகரித்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 99.15% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். கடந்த ஆண்டு 98.93% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். அதேபோல இந்தாண்டு 415 மாணவர்கள் ஆங்கிலத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல ஆங்கிலம் அவசியமாகி இருக்கும் இந்த காலத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதில் அசாத்திய சாதனை படைத்துள்ளனர் .
▶முதல் மாவட்டம்: 2023-பெரம்பலூர் (97.67%), 2024-அரியலூர் (97.31%) ▶கடைசி மாவட்டம்: 2023- ராணிப்பேட்டை (83.54%), 2024-வேலூர் (82.07%) ▶அதிக 100/100 எடுத்தப் பாடம்: 2023-3,649 (கணிதம்), 2024-20691 (கணிதம்) ▶தேர்ச்சி பெற்றவர்கள்: 2023இல் 8,35,614 (91.39%), 2024இல் 8,18,743 (91.55%) ▶மாணவர்கள் – 2023இல் 4,04,904 (88.16%), மாணவர்கள் 3,96,152 (88.58%) ▶மாணவிகள் – 4,30,710 (94.66%), 4,22,591 (94.53%)
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியான நிலையில், வரும் 13ஆம் தேதி ( திங்கட்கிழமை) முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவர்கள் வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 260 சிறைவாசிகள் 10ஆம் பொதுத் தேர்வெழுதிய நிலையில், 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.69%ஆக உள்ளது. இதுவே கடந்தாண்டு 264 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில், 112 பேர் (42.42%) தேர்ச்சி பெற்றனர். அந்தவகையில், கடந்தாண்டை காட்டிலும் சிறைவாசிகள் தேர்ச்சி சதவீதம் 45.27% அதிகரித்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், அரியலூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 28 மாவட்டங்கள் 90%க்கும் அதிகமான தேர்ச்சி விகிதங்களை பெற்றுள்ளன. நாகை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்கள் 90%க்கு குறைவான தேர்ச்சி விகிதங்களை பெற்றுள்ளன. இதனால், மாநிலம் முழுவதும் 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு பொதுத் தேர்விலும் வட மாவட்ட மாணவர்களே தேர்ச்சி பெறுவதில் அதிக சிரமத்தை அனுபவிக்கின்றனர். இன்று வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகளிலும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன. 12ஆம் வகுப்பு முடிவில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடைசி இடங்களை பிடித்திருந்தன. இதனை சீர் செய்வதற்கான சிறப்பு திட்டங்களை அரசு விரைந்து தீட்ட வேண்டும்.
நடப்பாண்டில், 13,510 மாற்றுத் திறனாளிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய நிலையில், 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.24% ஆக உள்ளது. இதுவே கடந்தாண்டு 10,808 மாற்றித் திறனாளிகள் தேர்வெழுதிய நிலையில், 9,703 பேர் (89.77%) தேர்ச்சி பெற்றனர். அந்தவகையில், கடந்தாண்டை காட்டிலும் மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி சதவீதம் 2% அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெளியான பொதுத்தேர்வில் முடிவில் ஒட்டுமொத்தமாக மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை (14939) விட மாணவர்கள் (15230), நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை (9159) விட மாணவர்கள் (9318) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 7,491 மேல்நிலைப் பள்ளிகள், 5,134 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 12,625 பள்ளிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் மாநிலம் முழுவதும் 4,105 பள்ளிகளும், 1364 அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டை விட, இம்முறை மாநிலம் முழுவதும் 387 பள்ளிகளும், 338 அரசுப் பள்ளிகளும் கூடுதலாக 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.