India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாகிஸ்தானில் PAK vs SL ODI தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அங்கு <<18263443>>கார் குண்டு வெடிப்பு<<>> நடந்ததால், இலங்கை வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதனால், உடனே நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டனர். ஆனால், அதை மறுத்த வாரியம், தொடர் முடியும் வரை அங்கேயே இருக்க ஆணையிட்டுள்ளது. பாதுகாப்பு வழங்குவதாக பாக்., கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

*இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் அடைவதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. *காதல் என்பது வெறும் வார்த்தை மட்டுமே, நீங்கள் தான் அதற்கு பொருள் கொடுக்கிறீர்கள். *ஒவ்வொரு வெற்றிகரமான நபருக்குப் பின்னாலும் அவரை வெறுப்பவர்களின் கூட்டம் உள்ளது. *அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. *இந்த தருணத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அனைத்தும் எப்போது முடிந்து போகும் என்று உங்களுக்குத் தெரியாது.

தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த ஒருநாள் கழித்து இரங்கல் தெரிவித்த அமெரிக்கா, தனது X பதிவில் தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. ஆனால், பாகிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு நடந்த உடனே இரங்கல் தெரிவித்து பதிவிட்டு, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுடன் நிற்பதாக தெரிவித்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, 2026 தேர்தலில் திமுக vs தவெக இடையேதான் போட்டி என கூறுவது விந்தையிலும் விந்தை என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலின் போது கூட்டத்தை யார் வேண்டுமானாலும் கூட்டிவிடலாம், ஆட்சிக்கு வர வேண்டும், மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிஹார் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த முடிவுகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பிஹாரில் NDA கூட்டணி தோற்றால், மத்தியில் புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அரசியல் தடுமாற்றத்தால், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி போன்ற முக்கிய குறியீடுகள் 5 முதல் 7% வரை குறுகிய கால சரிவை சந்திக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 518 ▶குறள்: வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். ▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி விடுவிக்கப்படுவதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோசெட் தெரிவித்துள்ளார். இன்று தொடங்க உள்ள தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ODI தொடரில் நிதிஷ் கலந்து கொள்வதால், அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட்டில் துருவ் ஜுரெல் விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். IND vs SA டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது.

ஆண்களுக்கும் மாதவிடாய் இருக்க வேண்டும் என்ற தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். ஆண்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்பட்டால், அந்த நேரத்தில் பெண்கள் படும் வலியை, Trauma, Feelings-ஐ அவர்களால் உணர முடியும் என்று தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு உள்ளிட்ட பல வலிகள் இருப்பதாக நெட்டிசன்கள் டிரோல் செய்தனர்.

▶நவம்பர் 13, ஐப்பசி 27 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 12:00 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶சிறப்பு: குரு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்.

இன்று வெளியான <<18269712>>Axis My India <<>>கருத்து கணிப்பிலும் பிஹாரில் NDA கூட்டணி தான் வெல்லும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த CM ஆக யார் வர வேண்டும் என்ற கருத்துக்கணிப்பில் நிதிஷ்குமாருக்கு 22% பேரும், தேஜஸ்வி யாதவ்விற்கு 34% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு 4% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.