India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிஹாரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை பொதுமக்கள் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பிஹாரில் உள்ள கிராமம் ஒன்றில் விசாரணை நடத்த சென்றனர். அதிகாரிகள் தங்களை கைது செய்வார்களோ என்று அஞ்சிய கிராம மக்கள், அதிகாரிகளை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு நீதிமன்றம் அளித்த ஜாமினை நிறுத்தி வைத்துள்ள டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அதை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 216 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 90, ஹர்மன்ப்ரீத் 42 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 40.4 ஓவரில் இலக்கை எட்டி இந்தியா வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி தென்னாப்பிரிக்காவை வாஷ் அவுட் செய்துள்ளது.

கல்வராயன் மலையில் மாயமானதாக சொல்லப்பட்ட 7 காவல்துறையினர் ஊருக்குத் திரும்பியுள்ளனர். சாராய வேட்டைக்காக இன்று காலை கல்வராயன் மலைக் காட்டுக்குள் 20 போலீசார் சென்றுள்ளனர். அதில், 13 பேர் மட்டுமே ஊர் திரும்பிய நிலையில் 7 பேர் திரும்பாததால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், தாமதமாக ஊர் திரும்பிய அவர்கள், ஓய்வெடுத்துவிட்டு வந்ததாகக் கூறியுள்ளனர்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள 9,995 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பணியின் தன்மையைப் பொறுத்து வயதில் மாற்றம் இருக்கும். விருப்பமுள்ளவர்கள் ஜூன் 27க்குள் <

வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் ஆதரவு கேட்டு வந்த தனக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்தீர்கள் என்று தெரிவித்துள்ள அவர், வயநாடு மக்களுக்காக பணியாற்றியது மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறியுள்ளார். வயநாடு, ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 343 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். முதல் இரு போட்டிகளிலும் சதம் அடித்த அவர் (117,136) இன்றைய போட்டியில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மகாராஜா’ படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அவர் நடித்துள்ள ‘ஏஸ்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அடுத்ததாக அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடைசியாக பாண்டிராஜ் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருந்தார்.

இன்று 1,563 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், இத்தேர்வை 750 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்கள் அனைவருக்கும் இன்று மறுதேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலின் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் அமெரிக்கா பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அமெரிக்கா ஒரு வெற்றிகூட பெறாத நிலையில் இங்கிலாந்து 1 வெற்றிபெற்றுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?.
Sorry, no posts matched your criteria.