India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டியுள்ளார். தொடக்கம் முதலே பொறுப்புடன் விளையாடிய அவர், 3 பவுண்டரி 6 சிக்ஸர்கள் விளாசி மொத்தமாக 72* ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், தொடர்ந்து 5ஆவது முறையாக அசத்தியுள்ளார். இதுவரை 2020- 74 (32), 2021- 119 (63), 2022- 55 (27), 2023- 55(32) ரன்கள் குவித்துள்ளார்.
திருச்சி பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அதிகப்படியான கூட்டத்தை கூட்டி மாஸ் காண்பித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கட்டப்பட்டிருக்கிறதா? மோடியையும், என்னையும் தான் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்.” என்று பரப்புரை செய்தார். இந்தக் கூட்டத்தால் திருச்சி நகரே ஸ்தம்பித்திருக்கிறது.
பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நன்னாளில், 92 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மார்ச் 25ஆம் தேதி, திருமணம் ஆகாதவர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது கூடுதல் பலன் தரும்.
நண்பர்களுடன் பைக் ரைடு சென்றுள்ள நடிகர் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு நடுவே பிரேக் கிடைத்ததால், நடிகர் ஆரவ் உள்ளிட்ட தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நடிகர் அஜித் பைக் ரைடுக்கு கிளம்பிவிட்டார். பைக் ரைடின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இயற்கையுடன் அஜித் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 173/6 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில், சஞ்சு சாம்சன் (82), ரியான் பராக் (43) ரன்களும், ட்ரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – திமுக இடையே தான் போட்டி என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். திருச்சி வண்ணாங்கோவிலில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே அதிமுக – திமுக இடையே தான் போட்டி” என்று பேசி பாஜகவை மறைமுகமாக சிறுமைப்படுத்தினார். கூட்டத்தில் அதிமுக பிரசார பாடல் வெளியிடப்பட்டது.
இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும் என ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “கடந்த முறை எங்கள் மீது குற்றம் சுமத்தியதால், இப்போது நாங்கள் கேள்வி கேட்கும் நேரம் வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கற்பழிப்பு, கொள்ளை வழக்குகளை சாதாரணமாக கடந்து செல்கின்றனர். பாஜக அரசு என்ன செய்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை-குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 2 பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ சினிமா App-இல் இலவசமாக காணலாம். யார் வெற்றி பெறுவார் என்று கமெண்டில் சொல்லுங்க
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி வருகிறார். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர், பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல், 4 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி தனது 34ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். இதனால் லக்னோ அணி இலக்கை நெருங்கி வருகிறது. யார் வெற்றி பெறுவார்?
அதிமுகவின் பொதுக் கூட்டத்தை புரட்சி பாரதம் கட்சி புறக்கணித்துள்ளது. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் புதிய தமிழகம், தேமுதிக, SDPI ஆகிய கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்டிருக்கும் நிலையில், புரட்சி பாரதம் கலந்து கொள்ளவில்லை. தேர்தலில் சீட்டு வழங்காததால் அதிருப்தியில் இருக்கும் புரட்சி பாரதம் கூட்டணியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.