India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான ED நடவடிக்கைக்கு தடை விதித்திருந்த ஐகோர்ட், அவரின் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், தடையை மீறி ED மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ED மனுத்தாக்கல் செய்த நிலையில், அதை ஏற்க SC மறுத்துள்ளது.

பிஸ்கட், சோப்பு, கார் என பல தலைமுறையாக இந்தியாவில் இருக்கும் சில உள்நாட்டு Brand-கள் வெறும் பெயர்கள் அல்ல. அவை பாரம்பரியம், பெருமை. உள்ளூர் வேர்கள் உலகளாவில் தடம் பதிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். அப்படி நமது அன்றாட வாழ்க்கையை வடிவமைத்த, சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட சில Brand-கள் பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க.

அசாமில் பலதார மணத்தை தடை செய்யும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் வரும் நவ.25-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும். பழங்குடியினருக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் Ad-களை தவிர்க்க, பலரும் Ad blocker பயன்படுத்துகின்றனர். அப்படியான யூஸர்களுக்கு யூடியூப் நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது. Ad blocker யூஸ் பண்ணுவோர் இனி யூடியூப்பில் வீடியோவே பார்க்க முடியாது. தனது புதிய அப்டேட்டில் Ad blocker இருப்பதை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள யூடியூப், அவர்களுக்கு சேவை வழங்குவதையும் நிறுத்துகிறது. Ad blocker-ஐ எடுத்தால் மட்டுமே, வீடியோ பார்க்க முடியும்.

சங்கரன்கோவில், <<18079595>>திட்டக்குடி<<>> வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுகவில், பல இடங்களில் உள்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்த பதவியிழப்பு சம்பவங்கள் தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளன.

நடிக்கும்போது தான் கண்டு வியந்த காட்சிகள் எதுவும் ‘வடசென்னை’ படத்தில் இடம்பெறாததால் வருத்தப்பட்டதாக நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆனால், ‘அரசன்’ படத்தில் வடசென்னையின் செந்திலாக இடம்பெற விரும்புவதாகவும், வெற்றிமாறனின் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வடசென்னை 1-ல் சேர்க்கப்படாத Footage-களை வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

பயிர்களை இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விற்பனை செய்ய இ-நாம் (e-NAM) அரசு செயலி உதவுகிறது. இதன்மூலம் லாபம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும். இதற்கு இச்செயலியில் நீங்கள் அறுவடை செய்த பயிரின் தகவலை உள்ளிடவேண்டும். ஒருவேளை நீங்கள் விவசாயி இல்லையெனில், செயலியில் வர்த்தகராக பதிவு செய்யலாம். விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்கி, அதை உணவு நிறுவனங்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கலாம். SHARE.

SIR மூலம்தான் திமுகவை அழிக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள்; அந்த முயற்சி ஒருபோது எடுபடாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை என சாடிய அவர், DMK தொடர்ந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி ADMK மனு தாக்கல் செய்தது கபட நாடகம் என விமர்சித்தார். மேலும், உண்மையிலேயே அக்கரை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்து இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.

அரிசியை வேக வைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஊறவைத்த பின் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் அரிசி தெரியுமா? அசாமின் கோமல் சால் எனப்படும் மந்திர அரிசி தான் அது. இதை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறிவிடும். இதன் பயன்பாடு காலப்போக்கில் குறைந்த நிலையில், சமைக்க நேரமில்லாமல் ஓடும் மக்களால், மீண்டும் இதற்கு மவுசு கூடியுள்ளது. ஆன்லைனில் கூட விற்பனை தொடங்கியுள்ளது.

புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நவ.23, 24 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 2 குழுக்களில் உள்ள 32 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சுமையை மேலும் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.