India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 3ஆவது முறையாக உயர்ந்துள்ளது. காலையில், முதலில் சவரனுக்கு ₹360 உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2ஆவது முறையாக மீண்டும் ₹360 அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 3ஆவது முறையாக ₹520 உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் 1 சவரன் தங்கம் விலை ₹54,160ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரே நாளில் ₹1,240 உயர்ந்துள்ளது.
உ.பி.யின் நொய்டாவில் வெப் சீரிஸ் பார்த்து ஓட்டல் உரிமையாளரின் 15 வயது மகனை முன் விரோதத்தால் கடத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில், மருத்துவ மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, குஜராத்தில் டிவி சீரியல் பார்த்து 13 வயது சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், வெப் தொடர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
தனது தந்தையின் நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளதாக நடிகர் பாண்டியனின் மகனும், ‘ஸ்டார்’ பட இயக்குநருமான இளன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இப்படத்தில் தனது அப்பா திரையில் தோன்றியபோது அரங்கம் அதிர ஒலித்த கைத்தட்டலால் இன்றைய நாள் தனக்கு சிறப்பாக அமைந்ததாகக் கூறியுள்ளார். தன் வாழ்வில் எப்போதும் இது சிறந்த தருணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
உ.பியில் பாஜக படுதோல்வி அடையும் என தான் எழுதித் தருவதாக ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் பாஜகவின் தோல்விக்கு உ.பி தான் வழிகாட்டப் போவதாகவும், இங்கு INDIA கூட்டணி மற்றும் அகிலேஷ் யாதவுக்குதான் வெற்றி என்றும் தெரிவித்தார். மேலும், தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
கொல்லம் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, ரயிலின் அபாய சங்கிலி செயல்படவில்லை என அப்பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், ரயிலில் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை எனவும், அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2இல் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக பொதுவெளியில் எதுவும் பேசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டாலும், முதலமைச்சருக்கான பணியில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று இரவு அல்லது நாளை சிறையில் இருந்து அவர் வெளியில் வருவார் எனத் தெரிகிறது.
கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ள நிலையில், பாஜகவுக்கு அவர் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி வலுவாக உள்ள டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காய் நகர்த்தி வந்த நிலையில், இந்த ஜாமின் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 25இல் தேர்தல் நடைபெற உள்ளது.
நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், சினிமாவில் நடிகனாக, ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே ‘ஸ்டார்’ படத்தின் கதை. கவினின் அசாதாரண நடிப்பும், யுவனின் இசையும் படத்திற்கு இரு தூண்கள். ஒரு சில காட்சிகளில் ஆங்காங்கே தொய்வுகள் இருந்தாலும், திரைக்கதை படத்தின் வேகத்தை குறைக்கவில்லை. காதல், கண்ணீர், வேதனை, பாசம் என அனைத்து எமோஷன்களும் இதில் உள்ளது. Way2News Rating: 2.5/5
நாட்டில் மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் வரை, மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது என பிரதமர் சூளுரைத்துள்ளார். மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் பிரசாரம் செய்த அவர், தான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலன் என்றார். வளர்ச்சியில் தன்னுடன் போட்டியிட முடியாது என்பதை அறிந்த காங்கிரஸ், பொய்களின் தொழிற்சாலைகளைத் திறந்து தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசி., அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார். 123 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அவர், 2013ஆம் ஆண்டு முதல்முறையாக நியூசி., அணிக்காக களமிறங்கினார். ஆனால், அணியில் பெரியளவில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், T20 உலகக் கோப்பையிலும் இடம் கிடைக்காததால், ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.