India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் PBKS 17 முறையும், RCB 14 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் PBKS, RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பெங்களூரு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.
விரக்தி என்ற மலையிலிருந்து நம்பிக்கை என்ற கல்லை நாம் வெட்டியெடுக்க முடியும்.
ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே.
தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.
நாங்கள் நினைவில் வைத்திருப்பது எங்கள் எதிரிகளின் வார்த்தைகளை அல்ல, எங்கள் நண்பர்களின் மெளனத்தை தான்.
நாம் வரையறுக்கப்பட்ட ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது.
– மார்ட்டின் லூதர் கிங்
உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமை நிர்வாகி செர்ஹெய் போப்கோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “மேற்கு உக்ரைனை தாக்கும் நோக்கில் கடந்த நான்கு நாள்களில், மூன்றுமுறை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. போலந்து வான்வழியில் செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகளால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை” என்றார்.
அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய MI அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் கொஞ்சம் தடுமாறினோம். இந்த தோல்வி எல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது. அவற்றில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்” எனக் கூறினார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்பித்தான் நாடு முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவோமென பாஜக பரப்புரை செய்துவருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சியைப் பிடிக்க பாஜக தில்லுமுல்லு நடவடிக்கையில் ஈடுபடும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எதிர்த்து I.N.D.I.A கூட்டணியில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளாமல் போனது கவலை அளிக்கிறது” என்றார்.
பிரபாஸ் – கமல் கூட்டணியில் உருவாகிவரும் ‘கல்கி 2898 AD’ படப்பிடிப்பு முடிவடையும் தறுவாயில் உள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில், அமிதாப், தீபிகா படுகோன் போன்ற பான் இந்தியா அளவிலான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை பிரபாஸ் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து உள்ளாராம். முந்தைய படங்களின் தோல்வியை ‘கல்கி 2898 AD’ படம் நிச்சயமாக சரி செய்யுமென தன் நட்பு வட்டத்தில் மனந்திறந்து கூறியுள்ளாராம்.
மார்ச் – 25 | பங்குனி – 12
கிழமை: திங்கள் | திதி: பிரதமை
நல்ல நேரம்: காலை 09.30 – 10.30 வரை, மாலை 04.30 – 05.30 வரை
கெளரி நேரம்: காலை 01.30 – 02.30 வரை, மாலை 07.30 – 08.30 வரை
ராகு காலம்: காலை 07.30 – 09.00 வரை
எமகண்டம்: காலை 10.30 – 12.00 வரை
குளிகை: நண்பகல் 01.30 – 03.00 வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
5ஆது வேட்பாளர் பட்டியலை தேசிய பாஜக தலைமை சற்றுமுன் வெளியிட்டது. அதன்படி, உ.பி மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி களமிறங்கவுள்ளார். மேனகாவுக்கு சீட் கொடுத்துள்ள பாஜக தலைமை, அவரது மகன் வருண் காந்திக்கு சீட் தரவில்லையாம். அவர் சிட்டிங் எம்.பி.,யாக இருக்கும் பிலிபிட்டில் ஜிதின் பிரசாதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக பாஜக தலைமையை வருண் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை முதலில் உறுதிசெய்த கட்சி புரட்சி பாரதம். பாமகவுடன் பேச்சுவார்த்தையில் இபிஎஸ் ஈடுபட்டபோதே, அவரை அழைத்து வட மாவட்டத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் பு.பா.க தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நடத்தினார். ஆனால், கூட்டணி குறித்து பேச மரியாதைக்காகக் கூட அவரை அதிமுக தரப்பு அழைக்கவில்லையாம். இதனால், ஜெகன் தீராத மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சென்னையில் CSK, பஞ்சாபில் PK, கொல்கத்தாவில் KKR, ராஜஸ்தானில் RR & அகமதாபாத்தில் GT என அந்த ஐந்து போட்டிகளிலும் சொந்த மாநிலங்களில் உள்ள மைதானங்களில் ஆடிய அணிகள் தான் வாகை சூடியுள்ளன. இன்று பெங்களூருவில் நடைபெறும் RCB, PK அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திலும் இந்நிலை தொடருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.