India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா சரவெடியாக வெடித்து வருகிறார். ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி (6,6,4,6,0,6) உட்பட 28 ரன்கள் விளாசியுள்ளார். ஒரு வைடு பால் போடப்பட்டதால் ஒரே ஓவரில் 29 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து இந்தியா 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (34*), பண்ட் (0*) களத்தில் உள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மருந்து எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ஐ.ஐ.டி & நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆராய்ச்சி விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்துக்கும், எதிர்கால நோய்க்கிருமிகளை அழிப்பதற்கும் உதவிகரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

செம்மொழித் தமிழ்நாள் விழா ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ₹91.35 லட்சம் மதிப்பீட்டில் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் எனவும், சிறந்த நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஸ்கூட்டர் மற்றும் பைக் விலையை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ₹1,500 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் Splendor உள்ளிட்ட வாகனங்களின் விலையும் அதிகரிக்கவுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால், விலை அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலம் புரொடக்சன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘பாட்டல் ராதா’ என பெயரிட்டுள்ளனர். பா.ரஞ்சித்தின் உதவியாளர் தினகரன் சிவலிங்கம் இயக்கும் இப்படத்தில், குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் இப்படம், பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது

அதிக மானியம் பெறுவதற்காக அரசு உதவிபெறும் பள்ளிகள் போலியாக பல மாணவர்களின் பெயரை இணைத்துள்ள தகவல் தெரியவந்துள்ளது. பெற்றோர்களின் மொபைல் எண்களை உறுதிப்படுத்த எமிஸ் இணையதளம் மூலம் OTP அனுப்பப்பட்டு வருகிறது. இதில் 4, 5 மாணவர்களுக்கு ஒரே எண் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் உள்ள போலியான மாணவர்களின் விவரங்களை நீக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலிக்கும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களிடம் பெரிய மாற்றத்தை பாஜக உருவாக்கும் எனக் கூறிய அவர், இது திராவிட மாடல் அரசல்ல, சாராய அரசு என வீடு வீடாகப் பிரசாரம் செய்வோம் என்றார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் கலந்துகொள்ளும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள்: கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ருதுராஜ், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அஹமது, முகேஷ் குமார், தேஷ்பாண்டே.
Sorry, no posts matched your criteria.