India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவையில் புதிய எம்பிக்கள் நேற்று முதல் பதவியேற்று வருகின்றனர். 2ஆவது நாளாக இன்றும் பதவியேற்பு நடக்கிறது. இதையடுத்து நாளை (26ஆம் தேதி ) சபாநாயகர் தேர்தல் நடக்கவுள்ளது. இத்துடன் தற்காலிக சபாநாயகர் பதவி காலாவதியாகும். இதைத் தொடர்ந்து, 27ஆம் தேதி மாநிலங்களவை கூடுகிறது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் கோலி 4,103 ரன்கள் சேர்த்து அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து இருந்தார். இதை அவர் நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்தார். நேற்று குவித்த 92 ரன்களுடன் சேர்த்து, 4,165 ரன்களை ரோஹித் சேர்த்தார். இதேபோல், 48 ஆட்டங்களில் வென்று அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

மேற்குத் திசை காற்று வேகமாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக இருக்குமென்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. அதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப் பட்டிருக்கிறது. மேலும், ரோஹித்தின் கிரிக்கெட் வரலாற்றில் நேற்றைய போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நேர்த்தியான மற்றும் பக்குவமான அவரது பேட்டிங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள தொழிற்சாலையை பிரிட்டானியா நிறுவனம் மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொழில்துறை விரோத போக்கே காரணம் எனவும், இப்படி இருந்தால் தொழிற்சாலைகளே இங்கு வராது என மத்திய அமைச்சர், மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள திரிணாமுல் தலைவர் குணால் கோஷ், நிர்வாக காரணங்களுக்காக தொழிற்சாலை மூடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சாலை விபத்தில் சிக்கியோர் அனைவருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன், விபத்தில் சிக்கியோர் பலர் மது போதையில் இருப்பதால் நிவாரணம் வழங்குவது தொடர்பான முடிவுகளை சரியாக எடுக்க முடியவில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, விபத்தில் சிக்கியோர் போதையில் இருந்தனரா என்று ரத்தப் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வென்றால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். அதேபோல், வங்கதேசம் வென்றால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

*‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. *வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *T20 WCயில், ஆஸி., அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. *A.P.J.அப்துல் கலாமின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஃபிரான்ஸில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மக்களை மதம், சமூக ரீதியாக பிரிக்கும் வலதுசாரி (RN) மற்றும் இடதுசாரி (LFI) கட்சிகளால் நாட்டில் உள்நாட்டு போர் மூளும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு, ஒரு அதிபர் இவ்வாறு பேசக்கூடாது எனவும், மக்களை நிம்மதி இழக்கச் செய்வதே மேக்ரானின் கொள்கைகள்தான் எனவும் எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்திய வம்சாவளியான விராஜித் முங்கலே, லண்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் வசித்து வரும் தாயைக் காண, லண்டனில் இருந்து 59 நாள்களில் 18,300 கி.மீ காரில் பயணம் செய்து இந்தியா வந்துள்ளார். பயணங்கள் மீதுள்ள ஈர்ப்பால் ஜெர்மனி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட16 நாடுகளை கடந்து அவர் வந்துள்ளார். ஒரு நாளைக்கு 400 முதல் 600 கி.மீ வரை பயணம் செய்ததாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.