News May 10, 2024

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள்

image

பயனர்கள் அடிப்படையில் கடந்த மாதத்திற்கான டாப் 10 சமூக வலைதளங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 38.95% பயனாளர்களுடன் பேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது. X தளம் – 16.36%, இன்ஸ்டாகிராம் – 15.05%, Reddit – 7.85%, லின்க்டுஇன் – 7.78%, ட்விச் – 5.11%, டிக்டாக் – 2.82%, Pinterest – 2.81%, Discord – 2.58% பயனர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளம் எது?

News May 10, 2024

இந்தியாவில் 29% பேர் சைவ பிரியர்கள்

image

இந்திய மக்கள் தொகையில் 29% பேர் சைவ பிரியர்கள் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 75% பேர் சைவ பிரியர்கள் என்றும், அதற்கடுத்து, அதிகபட்சமாக ஹரியானாவில் 70% பேர் சைவ பிரியர்கள் என்றும், 3ஆவது அதிகபட்சமாக பஞ்சாப்பில் 67% பேர் சைவ பிரியர்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேற்கு மாநிலங்களில் சைவ பிரியர்கள் அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

News May 10, 2024

மணிசங்கர் ஐயரின் கருத்தை ஏற்கவில்லை: காங்கிரஸ்

image

பாகிஸ்தான் தொடர்பாக மணிசங்கர் ஐயர் கூறிய கருத்தை ஆதரிக்கவில்லை என காங்கிரஸ்
கட்சி விளக்கமளித்துள்ளது. மணி சங்கர் ஐயரின் சொந்த கருத்துக்கு, காங்கிரஸ் பொறுப்பேற்க முடியாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களிடம் அணு ஆயுதம் இருப்பதை இந்தியா எப்போதும் மறக்கக்கூடாது எனவும் மணி சங்கர் ஐயர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

பிணம் ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவராக விமல்

image

பிணங்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவராக ‘களவாணி’ விமல் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு இறந்துபோன ஒருவரின் பிணத்தை வேனில் ஏற்றிச் செல்லும்போது, ஏற்படும் பிரச்னைகளைச் சமாளித்து, விமல் எப்படி மீள்கிறார் என்பது தான் கதைக்களமாம். இந்த படத்தில் கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

News May 10, 2024

அநீதிக்கு எதிராக கிடைத்த வெற்றி

image

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் அளித்திருப்பதை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அநீதிக்கு எதிராக கிடைத்த இந்த வெற்றி, நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியா கூட்டமைப்பையும் பலப்படுத்துகிறது, இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வேகத்தை அதிகரிக்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

மே 14ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 11ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 12ஆம் தேதி 9 மாவட்டங்களிலும், மே 13ஆம் தேதி 10 மாவட்டங்களிலும், மே 14ஆம் தேதி 8 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 10, 2024

இஷான் கிஷன் MI அணியில் விளையாடலாம்

image

இந்திய அணிக்காக விளையாட ஒவ்வொரு போட்டியிலும் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவுக்காக விளையாட உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். இந்திய அணியில் இடம்பிடிக்காத இஷான் கிஷன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் MI அணியில் விளையாடலாம். இது அறிவுரையல்ல; நட்பின் அடிப்படையில் சொல்கிறேன்” எனக் கூறினார்.

News May 10, 2024

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: அதிஷி

image

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என டெல்லி அமைச்சர் அதிஷி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு, மடிந்து போன ஜனநாயகத்தை மீண்டும் மீட்பதற்கான தொடக்கம் என்ற அவர், நீதியின் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவாலுக்கு 21 நாள் இடைக்கால ஜாமினை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.

News May 10, 2024

மாலத்தீவில் இருந்த இந்தியப் படைகள் முழுவதும் வாபஸ்

image

மாலத்தீவில் இருந்த இந்தியப் படைகள் முழுவதும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. மாலத்தீவுக்கு இந்தியா பரிசாக அளித்த 2 ஹெலிகாப்டர்கள், டோர்னியர் விமானம் ஒன்றை இயக்க 90 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களை மே 10க்குள் வெளியேற மாலத்தீவு அதிபர் மொய்சூ வலியுறுத்தியதை அடுத்து, 90 வீரர்களும் வெளியேறி விட்டதாகவும், அவர்களுக்கு பதில் தொழில்நுட்ப குழு பணியில் உள்ளதாகவும் மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.

News May 10, 2024

ஆழ்கடலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விருந்தோம்பல்

image

கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென் நார்வேயின் வடக்கு கடலுக்குள் 5 மீட்டர் ஆழத்தில் ‘அண்டர்’ என்ற மிகப்பெரிய ஆழ்கடல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அந்த உணவகத்தில், 18 வகையான கடல் உணவு & மதுபானம் அடங்கிய ஒரு காம்போவின் விலை ₹30 ஆயிரமாம்.

error: Content is protected !!