India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதை தெரிந்து கொள்வோம் 1) நாய் துரத்தும்போது ஓடாதீர்கள் 2) நாய் உங்களை பார்க்கும்போது, அதன் கண்ணை நேராக பார்க்காதீர்கள். நமது பலவீனத்தை புரிந்து கொண்டு, உடனடியாக கடிக்க தொடங்கி விடும் 3) நாய் நெருங்கும்போது, அச்சப்படாமல் நிமிர்ந்து நில்லுங்கள். நீங்கள் பயப்படவில்லை என்பதை உணர்ந்து விலகிவிடும்.
இந்து மதத்தினருக்கு எதிரானது காங்கிரஸ் என்று மோடி சாடியுள்ளார். தெலங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, இந்துக்களுக்கு எதிரான மனப்பாங்கு கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்துக்களையும் இந்துமத விழாக்களையும் வெறுக்கிறது என்றும் விமர்சித்தார். இந்துக்களை 2ம் தர குடிமக்களாக்க காங்கிரஸ் விரும்புவதாகவும், இதற்காகத்தான் வாக்கு ஜிகாத் குறித்து அக்கட்சி பேசுவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெயில் சுட்டெரிக்கும் சூழலில், சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருச்சி, ஈரோடு, நாகை, சிவகங்கை, சேலம், குமரி, தென்காசி, மதுரை, நாமக்கல், கோவை உள்பட 17 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
2024இல் இதுவரை வெளியான 80 தமிழ் திரைப்படங்களில் 70 படங்கள் தோல்வி அடைந்துள்ளதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தமிழ்ப் படங்களின் கதைகள் தரமில்லாமல் இருப்பதே இந்த தோல்விகளுக்கு காரணம். மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற நல்ல படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடியதை நாம் மறுக்க முடியாது. நிலைமை மேலும் மோசம் அடைவதற்குள் தமிழ் திரையுலகம் விழித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
மருத்துவ உலகில் முதல்முறையாக ஜீன் தெரபி (மரபணு) மூலம் பிரிட்டன் சிறுமிக்கு காது கேட்கும் திறன் கிடைத்துள்ளது. சிறுமி ஓபல் சாண்டிக்கு பிறக்கும் போதே காது கேட்கும் திறன் இல்லை. பரிசோதனை அடிப்படையில், ஜீன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தில்லா வைரஸ், மரபணு ஆகியவை கொண்ட கலவை, சிரிஞ்ச் மூலம் காதுக்குள் செலுத்தப்பட்டது. இதில் சேதமடைந்த செல்கள் சரியாகவே, காது கேட்கும் திறன் கிடைத்தது.
Go Digit நிறுவனத்தில் முதலீடு செய்த கோலி & அனுஷ்காவுக்கு 263% லாபம் கிடைத்துள்ளது. விரைவில் Go Digit நிறுவனம் ஐபிஓ பங்குகளை வெளியிட உள்ளது. இதில், கோலி தம்பதியினர் 2020இல் ஒரு யூனிட் ₹.75 என்ற விலைக்கு 2,66,667 பங்குகளை வாங்கியிருந்தனர். தற்போது, ஒரு யூனிட் ₹.272 என்ற நிலையில், அவர்கள் ₹.7 கோடி லாபம் அடைந்துள்ளனர். எனினும், கோலி தங்களின் பங்குகளை ஐபிஓவில் தற்போது விற்க முன்வரவில்லை.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிதம்பரம் தொகுதியில் தன்னை ஆதரித்து பரப்புரை செய்ததற்காக திருமாவளவன் அவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பில், விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான ரவிக்குமாரும் உடன் இருந்தார்.
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக் லெவிடேசன் தடத்தில் மிதந்து செல்லும் வடிவில் மேக்னடிக் ரோபோட் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலியை இந்திய அணி நிர்வாகம் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “விராட் கோலி மிகவும் அருமையாக விளையாடுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், குறைந்த பந்துகளில் 90 ரன்களை அவர் அடித்தார். ஐபிஎல் தொடரில் அவரது கடைசி சில இன்னிங்ஸ்கள் மிகச் சிறப்பானதாக இருந்தது” என்றார்.
பயனர்கள் அடிப்படையில் கடந்த மாதத்திற்கான டாப் 10 சமூக வலைதளங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 38.95% பயனாளர்களுடன் பேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது. X தளம் – 16.36%, இன்ஸ்டாகிராம் – 15.05%, Reddit – 7.85%, லின்க்டுஇன் – 7.78%, ட்விச் – 5.11%, டிக்டாக் – 2.82%, Pinterest – 2.81%, Discord – 2.58% பயனர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளம் எது?
Sorry, no posts matched your criteria.