India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤<<16987572>>கடலூர் <<>>லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சோகம்.. 3 மாணவர்கள் மரணம்
➤கடலூர் பள்ளி வேன் விபத்து.. <<16988553>>CM ஸ்டாலின் <<>>& இபிஎஸ் இரங்கல்
➤<<16987858>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹400 உயர்வு
➤நாடு முழுவதும் <<16987412>>நாளை <<>>பொது வேலைநிறுத்தம்.. பஸ் சேவை பாதிப்பு ➤RCB வீரர்<<16987106>> யஷ்<<>> தயாள் மீது FIR ➤<<16987497>>சாதி <<>>குறித்த பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா
இன்று ‘தாதா’ <<16986348>>கங்குலியின் <<>>பிறந்தநாள். ODI-ல் தொடர்ந்து 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய ஒரே வீரர் செளரவ் கங்குலி தான். 1997-ல் சகாரா கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வரிசையாக 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் கங்குலி. இந்த ரெக்கார்டை இன்று வரையிலும் யாராலும் வீழ்த்த முடியவில்லை. இது மட்டுமின்றி, ODI-ல் 11,363 ரன்களை குவித்து அதிக ரன்களை அடித்த 2-வது இந்தியரும் ‘தாதா’ தான்.
கடலூர், செம்மங்குப்பத்தில் <<16987835>>ரயில்<<>> மோதி பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் சாருமதி (15), செழியன் (14) & விமலேஷ் (10) ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் சாருமதி & செழியன் ஆகிய இருவரும் அக்கா – தம்பி என்பது சோகத்தின் உச்சம். இரு குழந்தைகளையும் இழந்த அவர்களது பெற்றோர் ஹாஸ்பிடலில் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன. மேலும், விஷ்வேஸ் மற்றும் டிரைவர் சங்கர் சிகிச்சையில் உள்ளனர்.
கடலூரில் <<16987125>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த துயர சம்பவத்திற்கு அன்புமணி, அண்ணாமலை, டிடிவி, வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமிழ் தெரியாதவர்களை தமிழ்நாட்டில் கேட் கீப்பராக நியமிக்கக் கூடாது என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரவிருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் வாக்கிங் சென்று மக்களிடம் பரப்புரை செய்த இபிஸ், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்று, தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அவர், கூட்டணியில் பல ரகசியங்கள் இருப்பதாகவும், சூழலுக்கு தகுந்தார்போல் பல கட்சிகள் வந்து சேரும் என்றார்.
இந்தியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகக் கூறி, அமைச்சர் TRB ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 2 & 3-வது இடங்களில் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. 4-வது இடத்தை கர்நாடகா & டெல்லி ஆகியவை பகிர்ந்து கொள்கின்றன.
ஆகாஷ் ஒரு எமோஷனலில் பொதுவெளியில் போட்டுடைத்துவிட்டார் என்று அவரது அக்கா கூறியுள்ளார். இங்கி.,க்கு எதிரான டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு, தனது அக்கா கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ச்சிபொங்க பேசினார் ஆகாஷ் தீப். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அவரது அக்கா, தீப் என் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறி நெகிழ்ந்துள்ளார்.
‘Chikitu’ என்ற ‘கூலி’ படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. எனவே, அடுத்தடுத்து அப்டேட்ஸ்களை வழங்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அந்தவகையில், 2-வது பாடல் விரைவில் ரிலீஸாகவுள்ளதாம். இது நாகர்ஜுனா – பூஜா ஹெக்டே இடம்பெறும் பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இப்படம் ஆக.14-ல் திரைக்கு வருகிறது.
கடலூரில் பள்ளி <<16987572>>வேன் மீது ரயில் மோதிய விபத்தில்<<>> அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முதலில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சொந்த வீடு கட்டியோ அல்லது வாங்கியோ குடியேற வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இது சிலருக்கு நிறைவேறாத கனவாகவே இருக்கும். அதற்கு அவர்களது சொந்த ஜாதகத்தில் செவ்வாய் கெட்டு இருப்பது தான் காரணம் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஆகையால் செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதமிருந்து செவ்வாய்க்கு அதிபதி ஆன முருகனை வழிபட்டு வந்தால் 9 வாரத்தில் நல்லது நடக்கும் என்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.