News May 10, 2024

தேர்ச்சி விகிதம் குறைந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை

image

தேர்ச்சி விகிதம் குறைந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை., துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை., இணைப்பில் 400க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில், 56 கல்லூரிகளில் 20%க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். 2 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை.

News May 10, 2024

கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை

image

கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும், கன்றும் தற்செயலாக அரளி பூவை தின்று உயிரிழந்தது. இதனால், அரளி பூவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.

News May 10, 2024

தெலுங்கு படங்களில் அதிகம் மேக்கப் போடுகிறார்கள்

image

மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அனுபவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மலையாளப் படங்களில் நடிப்பது எளிதானது எனக் கூறிய சம்யுக்தா, மொழி தெரியாத தெலுங்குப் படங்களில் நடிப்பது மிகவும் கடினம் என்றார். அத்துடன், தெலுங்கு படங்களில் அதிகளவில் மேக்கப் போடுவார்கள் என்பதால், அடிக்கடி டச் அப் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News May 10, 2024

சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காக்க வேண்டுகோள்

image

சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். திகார் சிறையில் இருந்து வெளி வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தொண்டர்களிடையே பேசிய கெஜ்ரிவால், தனக்காக பிரார்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தன்னை இடைக்கால ஜாமினில் விடுவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர் நன்றி கூறினார்.

News May 10, 2024

பிரிஜ் பூஷண் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

image

WFI முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தேவையான ஆதாரமுள்ளதாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என பிரிஜ் பூஷண் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீது ஐபிசி 354 & 354 ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 10, 2024

ED-ஐ கேள்விகளால் துளைத்த உச்ச நீதிமன்றம்

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், ED-யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 2022இல் பதிவான இந்த வழக்கில், 2 ஆண்டுகள் வரை அமைதியாக இருந்த அமலாக்கத்துறை, தேர்தல் அறிவிப்பு வந்த உடனே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பியது. மேலும், தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்கு பின்போ கெஜ்ரிவாலை கைது செய்திருக்கலாமே என்றும் நீதிமன்றம் வினவியுள்ளது.

News May 10, 2024

உற்சாகமாக கொண்டாடப்படும் உருளை திருவிழா

image

நாகலாந்தில், இந்தியாவின் முதல் உருளைக் கிழங்கு திருவிழா தொடங்கியுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள 70% மக்கள் உருளைக்கிழங்கு சாகுபடி செய்து வருகிறார்கள். விவசாயிகளின் உழைப்பை அங்கீகரிக்கவும், ஆர்கானிக் உருளைக்கிழங்கு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், விவசாயிகள் தாங்கள்
விளைவித்த உருளையை விற்பனை செய்து வருகிறார்கள்.

News May 10, 2024

15 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்

image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரத்தில் மழை பெய்யக் கூடும். சில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News May 10, 2024

CSK-வுக்கு எதிரான போட்டியில் குஜராத் பேட்டிங்

image

CSK-வுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 59ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6இல் வென்றுள்ள சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதேபோல, 11 போட்டியில் ஆடி, 4 போட்டிகளில் மட்டுமே வென்ற குஜராத், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

News May 10, 2024

12 நக்சல்கள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், இதுவரை 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சண்டை தொடர்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

error: Content is protected !!