India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹85,000 வரை உயரலாம் என்று கமாடிட்டி சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து மத்திய வங்கி, வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதால் அமெரிக்க டாலரின் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டாலர் விலை வீழ்ச்சி, உள்நாட்டு தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கரன்சி சந்தையில் லாப முன்பதிவு தூண்டப்பட்டு, தங்கம் விலை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளன கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம் என அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தங்களின் நீண்ட போராட்டத்தால் பிரிஜ்பூஷண் மீது நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், இதை வரவேற்பதாகவும் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 மனைவி இருப்பவர்களுக்கு, மகாலட்சுமி திட்டத்தில் ஆண்டுக்கு ₹2 லட்சம் வழங்கப்படும் என ம.பி., காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சு தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்தில் சமுத்திரகனி, சூரி, உன்னி முகுந்தன், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான கில் (104) மற்றும் சாய் சுதர்சன் (103) சென்னை அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அடுத்தடுத்து சதமடித்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை சேர்த்தது.
கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளதற்கு ஜெய்ராம் ரமேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம் ஒருதலை பட்சமானது என்று விமர்சித்த அவர், இக்கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு நிரந்தர களங்கத்தை ஏற்படுத்தும் என்றார். முன்னதாக, தேர்தல் ஆணையத்தை விமர்சித்த கார்கேவுக்கு, தேர்தல் ஆணையம் விளக்க கடிதம் எழுதி அவரை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில், குஜராத் புது வரலாற்று சாதனை படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன், கில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடினர். சிஎஸ்கே பந்துவீச்சாளர்களால் அவர்களை பிரிக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய 2 பேரும் சதமடித்தனர். சுதர்சன் 103 ரன்னில் ஆட்டமிழக்க இந்த ஜோடி பிரிந்தது. இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தது, IPL வரலாற்றில் புது சாதனை ஆகும்.
பாகற்காய் தோலை சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் போட்டு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகுதூள், தண்ணீர் சேர்த்து கலக்கினால் பாகற்காய் ஜூஸ் ரெடி. இது கல்லீரல் பிரச்னை வராமல் தடுக்கும். மேலும், நீரிழிவு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. உடல் வலிமையை கூட்டுவதற்கு உதவுகிறது.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர்கள் கில், சாய் சுதர்சன் அதிரடியாக சதம் விளாசினர். அகமதாபாத்தில் நடக்கும் இப்போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் அதிரடியாக 50 பந்துகளில் சதம் விளாசினர். பின்னர் சாய் சுதர்சன் 103 ரன்னிலும், கில் 104 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் மறுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “இந்திய மக்களவை தேர்தலில் தலையிடவில்லை. அது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டின் தேர்தல் விவகாரத்திலும் அமெரிக்க அரசு தலையிடுவதில்லை” என விளக்கமளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.