India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே 3-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் சரியாக வேலை செய்யாத மற்றும் கட்சி பொறுப்பாளர்களிடம் இணக்கமாக செல்லாத மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படலாம் என்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோடை வெயில் பட்டையை கிளப்பும் நேரத்தில் AC இல்லாம தூங்க முடியல என சொல்பவரா நீங்கள். உங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். 20°C கீழே AC வைத்து தூங்கினால் உடலில் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாம். முக்கியமாக சளி, இருமல், தோல் நோய்கள் உள்ளிட்டவை வருமாம். ஹார்மோன் உற்பத்தி, நீர்சத்து குறைவு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படுமாம். AC-ய பாத்து யூஸ் பண்ணுங்க.
இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த GT அணி, RR அணிக்கு 210 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (39) & ஷுப்மன் கில் (84) ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். அதன்பின் களமிறங்கிய ஜோஸ் பட்லரும் (50*) தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில், GT அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்திருக்கிறது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாவார் என்று செய்திகள் வெளியானது. முன்னதாக, அமித் ஷா – சந்திரபாபு சந்திப்பு நடைபெற்றபோது கூட, இதற்காகத்தான் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்று பேசப்பட்டது. ஆனால், ராஜ்யசபா வேட்பாளராக, ஆந்திராவின் வெங்கட சத்யநாராயணாவை பாஜக அறிவித்துள்ளது. ஆகையால், அண்ணாமலை தற்போதைக்கு MP ஆகப்போவதில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் CSK கடைசி இடத்தில் இருப்பதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது மிகவும் சிரமம். அப்படி தகுதி பெறாவிட்டால், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தோனி இல்லாமல் நடைபெறும் IPL final இதுவாகத்தான் இருக்கும். 2008-ம் ஆண்டு IPL தொடங்கியது முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அவர் இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டும் CSK ஃபைனலுக்கு தகுதி பெறவில்லை.
பிரான்ஸிடமிருந்து ₹64,000 கோடி மதிப்பீட்டில் மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். கடந்த 9-ம் தேதி இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கி இருந்தது. ஏற்கெனவே இந்தியாவிடம் 36 ரபேல் போர் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பர்சனல் லோனை விரைவாக அடைக்க: ◆ஆண்டுக்கு ஒரு மாத EMI-யை கூடுதலாக செலுத்த முயற்சியுங்கள். இது அசலுடன் சேர்த்து வட்டித் தொகையையும் குறைக்கும் ◆உதாரணத்துக்கு EMI ₹4375.30 என்றால், அதை ரவுண்டாக (₹4500) செலுத்த பழகுங்கள் ◆குறைந்த வட்டிக்கு மாறுங்கள்: வாங்கிய லோனை விட குறைந்த வட்டி கேட்கும் லோன் திட்டங்களில் (உ-ம்: பிபிஎப், வேறு லோன்கள்) கடன்பெற்று இதை அடையுங்கள். இதற்கு நீங்கள் வங்கியில் பேசவேண்டும்.
நீட் தேர்வை பாஜக தான் சட்டமாக கொண்டுவந்தது; காங்கிரஸ் இல்லை என்று காங்., கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சட்டம் காங்., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று நிரூபித்தால், நான் ராஜினாமா செய்கிறேன் என்று சவால் விடுத்த அவர், பாஜக ஆட்சியில் என்று நிரூபித்தால் நீங்கள்( பாஜக எம்.எல்.ஏ.க்கள்) ராஜினாமா செய்ய தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
வரும் மே 14-ல் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வதால் நன்மைகள் பெறும் ராசிகள்: *மேஷம்: செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கன்னி: தொழிலில் வெற்றி. வருமானம் உயரும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். *துலாம்: கல்வி மேம்படும். தொழில், வேலையில் முன்னேற்றம். *கும்பம்: குழந்தை மூலம் மகிழ்ச்சி, காதல் உறவு மேம்படும். வருமானம் உயரும். *மீனம்: தொழிலில் முன்னேற்றம், நிதிநிலை மேம்படும்.
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் புதிய கட்சியில் இணைவது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், திமுக, அதிமுக, தவெக எனப் பல கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்தது உண்மை தான். ஆனால், எந்தக் கட்சிக்கு செல்வது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை. மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன். அந்த முடிவை மே மாத இறுதிக்குள் நிச்சயம் அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.