India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ODI ஆட்டத்திலுமே விராட் கோலி டக் அவுட் ஆனார். இதன்மூலம், கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக டக் வாங்கிய இந்திய வீரர்கள் பட்டியலில் 40 டக் அவுட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. இதனால், 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவரது ரசிகர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நீங்கள் இருக்கும் ஏரியா 40 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை தெரிஞ்சுக்கணுமா? ➤Google Earth-க்குள் செல்லுங்கள் ➤இதில் ‘Explore Earth’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால், மேலே ‘View’ என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதில் ‘Show Historical Imagery’ ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க. இப்படி செய்தால் பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வசிக்குமிடம் எப்படி இருந்தது என Time Travel செய்து பார்க்கமுடியும். SHARE.

வெள்ளி விலை இன்று(அக்.23) கிலோவுக்கு ₹1,000 குறைந்துள்ளது. கிராம் ₹174-க்கும், பார் வெள்ளி ₹1,74,000-க்கும் விற்பனையாகிறது. அக்.15-ம் தேதி முதல் இன்று வரை 7 நாட்களில் மட்டும் கிலோவுக்கு ₹33,000 குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக முதலீடு செய்யும் நோக்கில் வெள்ளியை வாங்கிக் குவித்தவர்களின் கவனம் தற்போது பங்குச்சந்தையின் மீது விழுந்துள்ளதாக கூறும் வல்லுநர்கள், விலை மேலும் குறையும் என கணித்துள்ளனர்.

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு திமுக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்து 10 நாட்கள் ஆகியும் 8,000 மெ.டன் நெல் மூட்டைகளை, அரசு கொள்முதல் செய்யாததால் நனைந்து வீணானதாக கண்டனம் தெரிவித்துள்ளார். 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், ஏக்கருக்கு ₹50,000 நிவாரணம் வழங்கவும் கோரியுள்ளார்.

இந்திய அணியின் ஓப்பனர் Hitman ரோஹித் சர்மா 74 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 17 ரன்களுக்குள் கில் & கோலி ஆகியோரை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு ரோஹித்தும், ஷ்ரேயஸ் ஐயரும் வலுசேர்த்து வருகின்றனர். இந்திய அணி தற்போது வரை 21.5 ஓவர்களில் 94/2 ரன்களை எடுத்துள்ளது.

டியூட் படத்தில் தாலி செண்டிமெண்ட், ஆணவக்கொலை இதைபற்றிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தது பலதரப்பட்ட விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த டைரக்டர் கீர்த்தீஸ்வரன், இது தமிழ்நாடு. இங்கு ஒரு ‘பெரியவர்’ இருந்தார். அவர் வழியில் வந்துதான் நாங்கள் இதையெல்லாம் பேசுறோம். இதற்கு முன் நிறைய பேர் சொன்னதை, நாங்களும் அடுத்த தலைமுறைக்கு சொல்கிறோம். இனியும் சொல்வோம் என பதிலளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் திமுக <<18078637>>MLA பொன்னுசாமியின்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இருமுறை MLA-வாக தேர்வாகி பழங்குடியின மக்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவரின் இழப்பு திமுகவுக்கு பேரிழப்பு என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், MLA பொன்னுசாமியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 738 புள்ளிகள் உயர்ந்து 85,165 புள்ளிகளிலும், நிஃப்டி 206 புள்ளிகள் உயர்ந்து 26,074 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் தொட்டதே புதிய உச்சமாக இருந்த நிலையில், மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி செல்வதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும் ➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள் ➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் ➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். SHARE.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழையால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிறைந்து வருகின்றன. நீர்வள துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 TMC ஆகும். இதில், தற்போது 196.897 TMC அதாவது 87.77% தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14, 141 பாசன ஏரிகளில், 1,522 ஏரிகள் 100%, 1,842 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன.
Sorry, no posts matched your criteria.