India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சூடானில் துணை ராணுவப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. மேற்கு சூடான் பகுதியில் டார்பூர் மாகாணத்தில் எல் ஃபேஷரில் நடந்த இந்த தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தொடர் நாய்க்கடி சம்பவங்களைத் தொடர்ந்து சென்னையில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்ய மாநகராட்சி வலியுறுத்தியது. அதில் கிடைத்த தகவல்களின் படி, சென்னையில் 1246 லேப்ரடார் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. தொடர்ந்து, 498 கோல்டன் ரிட்ரீவர், 455 ஜெர்மன் ஷெப்பர்டு, 274 பீகில், 146 ராட்வீலர், 128 டாபர்மேன், 91 கண்ணி நாய்கள் வளர்க்கப்படுகின்றன.

வேலையில்லாமல் துயரப்படுவோர், பணியிடத்தில் முன்னேற்றம் இல்லாதோர் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு குறித்து ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று காலையில் குளித்து சுத்தமானதும், அனுமனையும், ராமரையும் வழிபட வேண்டும். இதுபோல வழிபட்டால் வேலைவாய்ப்பு கிடைக்கும், பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் விகிதம் 0.9 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அளவில் இது 2.8% ஆகும். தமிழகத்தில் 2007ஆம் ஆண்டு 3.5 சதவீதமாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம், படிப்படியாக குறைந்து 2020ஆம் ஆண்டு 1.3 சதவீதமாக இருந்தது. அது தற்போது ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. சுகாதாரத் துறை மற்றும் மருத்துவர்களின் முயற்சியால் இது சாத்தியமானதாக ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

+1 மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தை 9ம் வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும். 10ம் வகுப்பு வரை வழங்கப்படும் அரசின் அனைத்து உதவிகளையும் 12ம் வகுப்பு வரை விரிவுபடுத்தலாம் என முதல்வருக்கு முருகேசன் குழு பரிந்துரை செய்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். வாரத்துக்கு 4 பாடவேளையாக உடற்கல்வி வகுப்புகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

புதிய கிரிமினல் சட்டம் குறித்து ஆட்சேபம் இருந்தால் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். புதிய கிரிமினல் சட்டங்கள் தமிழிலும் கொண்டு வரப்படும். தமிழில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து பேச தமிழக முதல்வரோ, எம்பிக்களோ தன்னை சந்திக்க நேரம் கேட்கவுமில்லை, யாரும் நேரில் வரவுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து 650 பேர் தேர்வாகியுள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 700 பேர் வரை தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. எனவே, அரசு இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஓலா வாகன விற்பனை 2023 ஜூலை முதல் 2024 ஜூன் வரை, 107% அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 36,716 ஓலா வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் பைக் நிறுவனமாக ஓலா மாறியுள்ளது. இந்நிறுவனம் பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைக்க இருக்கும் நிலையில் அவர்களது விற்பனையும் அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு புதிதாக அமல் படுத்திய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது இந்திய ஆட்சி மொழி சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாயை, கூட்டுறவு வங்கியில் சேமித்தால், கூடுதல் வட்டி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4% வரை வட்டி கிடைக்கும். ஆனால், மகளிர் உரிமைத் தொகை ₹1000-ஐ கூட்டுறவு வங்கியில் சேமிக்கும்போது 7.5% வட்டி பெறலாம். இதற்காக அரசு மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தை நீலகிரியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது, விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
Sorry, no posts matched your criteria.