News March 18, 2024

சற்றுநேரத்தில் அரசியலை புரட்டிப்போடும் தீர்ப்பு

image

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் ஓபிஎஸ் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்து, சாமி கும்பிட்டார்.

News March 18, 2024

சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள தேர்தல் பத்திரங்கள்

image

தேர்தல் பத்திரங்கள் குறித்த மனுவை தாக்கல் செய்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால், பத்திர விவரங்கள் தவறாக உள்ளதாக மற்றொரு சந்தேகத்தை தெரிவித்துள்ளார். ஏப்ரல்-2018 இல் தலா ரூ.1000 வீதம் 2 தேர்தல் பத்திரங்களை வாங்கினேன். ஆனால், எஸ்பிஐ வெளியிட்ட பட்டியலில் 20 அக்டோபர் 2020இல் வாங்கப்பட்டதாகக் காட்டுகிறது. இது தவறா? அல்லது என் பெயரில் வேறு எவரேனும் வாங்கியுள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 18, 2024

RCB அணிக்கு இவ்வளவுதான் பரிசுத் தொகையா?

image

விறுவிறுப்பான WPL இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றிபெற்ற ஆர்சிபி அணிக்கு ரூ.6 கொடியும், டெல்லி அணிக்கு ரூ.3 கொடியும் பரிசாக வழங்கப்பட்டது. இருப்பினும் வெற்றிபெற்ற RCB மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு கொடுப்பதை விட குறைவாக பணம் கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது.

News March 18, 2024

திருவண்ணாமலை கிரிவலம் எப்போது செல்லலாம்?

image

திருவண்ணாமலை என்றதும் நினைவிற்கு வருவது அண்ணாமலையாரும், கிரிவலமும் தான். மற்ற எந்த தலங்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்கு மட்டுமே பக்தர்களுடன் சேர்ந்து அண்ணாமலையாரும் கிரிவலம் செல்லும் உற்சவம் நடைபெறும். கைலாயத்தை வலம் வந்து வணங்கியதற்கு சமமான பலனை தரக் கூடியது கிரிவலம். எப்போது கிரிவலம் சென்றாலும் உயர்வான பலன் கிடைக்கும். என்றாலும் பெளர்ணமி நாட்களிலே அதிகளவில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

News March 18, 2024

”திமுகவுக்கு தோல்வி உறுதி”

image

லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றது அம்பலமாகியுள்ளதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் குலுக்கல் சீட்டு, லாட்டரி சீட்டு, ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. ஆனால், மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுகவை வரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

News March 18, 2024

பெட்டிங் ஆப் மோசடி.. முன்னாள் முதல்வர் மீது வழக்கு

image

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்த ED அறிக்கை அடிப்படையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப் புரமோட்டர்கள் பாகேலுக்கு ரூ.508 கோடி கொடுத்ததாக முன்பு குற்றஞ்சாட்டிய ED, சமீபத்தில் இது தொடர்பாக அறிக்கை அம்மாநில அரசிடம் அளித்துள்ளது. ஆனால், இது அரசியல் பழிவாங்கலுக்காக பாஜக அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்கு என பாகேல் குற்றம் சாட்டியுள்ளார்.

News March 18, 2024

ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கு நன்கொடை

image

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில், மார்ட்டினின் Future Gaming நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அதுவும் EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோதுதான், ₹1,368 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு ₹500 கோடியும், மீதமுள்ள ₹868 கோடி தொகையை பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நிதி கொடுத்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

News March 18, 2024

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி

image

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழர் தேசம் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாநிலங்களவையில் இடம் மற்றும் 2026 தேர்தலில் 5 தொகுதிகள் என்ற நிபந்தனையுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.கே.செல்வகுமார் அறிவித்துள்ளார்.

News March 18, 2024

‘கரும்பு விவசாயி’ சின்னம் இன்று விசாரணை

image

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை இன்று காலை அவசர வழக்காக விசாரிக்கிறது.

News March 18, 2024

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

error: Content is protected !!