India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் செங்கோட்டையன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால், கோபிசெட்டிபாளையத்தில் புதிய அலுவலகத்தை பிற்பகல் 12 மணிக்கு Ex அமைச்சர் SP வேலுமணி திறந்து வைக்கிறார். செங்கோட்டையன், அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் கோர்ட்டில் EPS தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இருதரப்பு பிரிவால் கோபி அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

WhatsApp-க்கு வரும் தேவையில்லாத போட்டோ, வீடியோக்கள் தானாகவே Save ஆவதால் Storage வேகமான Full ஆகலாம். இதனை தடுக்க, ➤WhatsApp Settings-க்கு சென்று Data Storage and Usage என்ற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤அதில் Media Auto-download என இருக்கும் ➤அதற்கு கீழ் VIDEO, AUDIO, DOCUMENTS என பல ஆப்ஷன்களை காட்டும் ➤அதில் தேவையானதை க்ளிக் செய்து, When using mobile data என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். SHARE.

சாதாரண தங்கத்தில் எவ்வளவு தங்கம் இருக்கோ அதே அளவு தங்கம் தான் வெள்ளை தங்கத்திலும் இருக்கிறது. ‘ரோடியம்’ என்ற சில்வர் நிற உலோகம் மூலம் முலாம் பூசப்படுவதுதான் இதிலிருக்கும் ஒரே வித்தியாசம். எனவே மஞ்சள் தங்கத்திற்கு மார்க்கெட்டில் என்ன விலையோ, வெள்ளை தங்கத்திற்கும் அதேதான். ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், வெள்ளை தங்கம் அடிக்கடி கருத்துபோகும். அதனால் பராமரிப்புச் செலவு கொஞ்சம் அதிகம். SHARE.

SIR-க்கு எதிராக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என SC அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

‘ஆதார் விஷன் 2032’ என்ற புதிய திட்டத்தின் கீழ், ஆதார் கார்டு சேவையிலும் AI தொழில்நுட்பத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 அதிநவீன தொழில்நுட்பங்கள் வரவுள்ளன ✦AI: மோசடிகளை குறைக்கவும் முடியும் ✦குவாண்டம் கம்ப்யூட்டிங்: எதிர்காலத்தில் வரக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து ஆதார் அமைப்பைப் பாதுகாப்பது ✦பிளாக்செயின்: தரவுகள் சரிபார்ப்பை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் என கூறப்படுகிறது.

வெள்ளி மீண்டும் விலை உயர்வைக் கண்டுள்ளது. இன்று (நவ.10) கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. 1 கிராம் ₹167-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,67,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் தங்கத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை உயர்ந்ததால் பலரும், அதில் முதலீடு செய்தனர். ஆனால், அதன் பின்னர் விலை சரிந்த பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இன்றைய விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கோவாவில் நடைபெற்ற ’அயர்ன்மேன் 70.3’ நிகழ்வில் பங்கேற்று நீச்சல், சைக்கிளிங், ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்தார் அண்ணாமலை. இதனை பாராட்டி PM மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த அவர், கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

சிறிய வயதில் பீச்சில் பார்த்த சிலையும், ஆண்ட்ரியாவும் தற்போதுவரை ஒரே மாதிரி இருப்பதாக விஜய்சேதுபதி கூறியுள்ளார். 2006-ல் ஒரு விளம்பரத்தில் ஆண்ட்ரியாவை பார்த்து ‘யார்ரா இந்த பொண்ணு!’ என நினைத்ததாகவும், நாளை தனது மகனும் அதே மாதிரி கேட்பார் என்றும் பேசியுள்ளார். மேலும், வீட்டுக்கு சென்று பெட்டில் படுப்பீங்களா, இல்லை ஃபிரிட்ஜில் உட்காருவீங்களா என கேட்டு அடுக்கடுக்காக வர்ணித்தார்.

பொங்கல் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. வரும் ஜன.9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு தினந்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கும். ஜன.9-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜன.10-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், ஜன.11-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளை மறுதினமும் <

காற்று மாசை பார்த்து நீங்கள் பயப்படுவது சரியே. ஏனென்றால் உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் மக்கள் இதனால் இறக்கின்றனர். அத்துடன் 10-ல் 9 பேருக்கு சுவாச பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க சிலர் காஸ்ட்லியான Air Purifier-களை வாங்கி வைக்கிறார்கள். இதற்கு பதிலாக வீட்டுக்குள் சில செடிகளை வளர்க்கலாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. பலரது உயிரை காக்கும் SHARE THIS.
Sorry, no posts matched your criteria.