India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக கைவசம் இருந்த 2 இடங்களில் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று கருத்தப்பட்ட நெல்லை மற்றும் கடலூரில் பாஜகவின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், தேனிக்கு பதில் நெல்லை, திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை, ஆரணிக்கு பதில் கடலூர் ஆகிய 3 இடங்கள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் கார்த்தி, கரூரில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர் களமிறங்க வாய்ப்புள்ளது.
தேமுதிக, பாமக உடனான கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் நடக்கும் இந்த ஆலோசனையில், தேமுதிக, பாமக கேட்கும் தொகுதிகளை கொடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. எப்படியாவது அக்கட்சிளுடனான கூட்டணியை தக்க வைத்தே ஆக வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியதாகவும் கூறுப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்.19இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இபிஎஸ் வசமே கொடி, சின்னம் உள்ளது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிட உள்ளதாக ஓபிஎஸ் அணி திட்டவட்டமாக கூறுகிறது. இதுதொடர்பான வழக்கில் இன்று இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில், சின்னத்தை முடக்கும் பணியில் ஓபிஎஸ் அணி ஈடுபடும் எனத் தெரிகிறது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 9+1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 1. திருவள்ளூர் (தனி) 2. கடலூர் 3. மயிலாடுதுறை 4. சிவகங்கை 5. திருநெல்வேலி 6. கிருஷ்ணகிரி 7. கரூர் 8. விருதுநகர் 9. குமரி 10. புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 WPL தொடரை கைப்பற்றி, பெங்களூரு அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, நேற்று மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளில் (மார்ச் 17), RCB அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு சமர்ப்பிப்பதாக RCB ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரிலும் RCB வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது.
உத்தேச வேட்பாளர்கள் வேட்புமனுவை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் 5 இடங்கள் வரை ஓபிஎஸ் தரப்பு கேட்டுள்ளது. நாளை பிரதர் மோடி உடனான சந்திப்புக்கு பின், போட்டியிடும் இடங்கள் இறுதியாகும் என்பதால், ஓபிஎஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரட்டை இலை கிடைக்காத பட்சத்தில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து அவரது தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது.
அதிமுக – பாமக இடையிலான கூட்டணி நாளை மறுநாள் இறுதியாக வாய்ப்புள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியானது. இந்நிலையில், திடீர் திருப்பமாக பாமக பாஜக உடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி அமைப்பதில் பாமகவின் நிலைப்பாடு நொடிக்கு நொடி மாறுவதால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். கூட்டணி குறித்து முடிவு எடுக்க இன்று மாலை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது, 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை 9.10 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய போது, ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதளங்கள் முடங்கின. சிறிது நேரம் கழித்து டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், CSK இணையத்தளத்தில் 4 இலக்க OTP-க்கு பதிலாக 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. 2019 செப்.8ல் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற அவர், 2021 பிப்.18 முதல் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என விருப்பம் தெரிவித்திருந்த அவர், இன்று ராஜினாமா செய்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.