India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக, ரிஷாத் ஹொசைனின் அதிரடி ஆட்டத்தால் 41 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வங்கதேசம் வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது வங்கதேச அணி.
மும்பையில் நேற்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல், மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் காங்., தலைவர் ஒருவர் சோனியாவை சந்தித்து அழுததாக கூறினார். EDயிடம் இருந்து தப்பிக்க பாஜகவில் சேர்ந்தார் என்றும் கூறியிருந்தார். அது அசோக் சவான் என பலரும் கூறிய நிலையில், அது நான் இல்லை என அசோக் சவான் மறுத்துள்ளார். “ராகுல் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசினார். அது நான்தான் என கூறுவது உண்மையல்ல” என்றார்.
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் தொடர்பிலிருந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளார்களாம். அவருக்கு ஃபைனான்ஸ் செய்த மலேசியப் பிரமுகர் ஒருவர் தற்போது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அடிப்படைவாத அமைப்பு ஒன்றுக்கு அவர், நிதி உதவி செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சியினர் பீதியில் உள்ளனராம்.
அமித் ஷா பெயரை முதலில் கேட்டதும் அவரும் ஒரு நடிகர் என்று தான் நினைத்ததாக சந்தான பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அமித் ஷா பிறந்தநாளுக்கு என் புகைப்படத்தை போட்டு சிலர் வாழ்த்து தெரிவித்ததை பார்த்தேன். அவர்களுக்கு நான் யாரென்று தெரியவில்லையா? அமித் ஷா புகைப்படம் கிடைக்கவில்லையா எனத் தெரியவில்லை. முதலில் இதை பார்த்து என்ஜாய் செய்தேன். தற்போது அந்த மாதிரி நடப்பதில்லை என்றார்.
6 வருடங்களுக்கு முன்பு விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த ரசிகை, தற்போது 2024 WPL கோப்பையை அவருக்கு சமர்ப்பித்துள்ளார். நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில், டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் RCB வீராங்கனை ஷ்ரேயங்கா பட்டில், 13 விக்கெட்டுகளை வீழ்த்தி Purple கேப்புக்கு சொந்தக்காரரானர். கோலியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2006-11ல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து வரும் நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் முறையிட்டிருக்கிறார். அதிமுகவின் இரு அணிகளையும் பொதுச் சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என்றும் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக பாஜக கூட்டணிக்கு 10% வாக்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும். அதேநேரம், மிகப்பெரிய வாக்கு வங்கி வைத்திருக்கும் அதிமுகவும் பாமகவும் இணைந்தால், வட தமிழகம் & கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளை பெறும்” எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரது மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ பட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்தப் படத்தில், மொத்தம் 15-க்கும் மேற்பட்ட சண்டைக் காட்சிகள் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமா கதைக்களத்தில் உருவாகும் இப்படத்துக்கு சாம் CS இசையமைக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்க உள்ளது. ரூ.500 கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த மனுக்களை மார்ச் 20, மதியம் ஒரு மணிக்குள் கொடுக்க வேண்டும். பொதுத் தொகுதிக்கு ரூ.30 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.15,000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.