India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊழலை ஒழிப்பதே தமது இலக்கு, தீர்மானம் என்று, பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். ஊழல் என்பது, நாட்டை அரிக்கும் கரையான்கள் போன்றது என குறிப்பிட்ட அவர், ஊழலை வெறுக்கும் மனநிலையை மக்கள் மனதில் ஏற்படுத்தவே, தாம் முழு வீச்சில் போராடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு என்பது, தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு அளவீடாக கருதவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இதனிடையே, உயிரிழந்தவர்கள் குடித்தது சாராயம் அல்ல, வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், அந்த தண்ணீரில் 29.5% மெத்தனால் கலக்கப்பட்டது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TTV தினகரனுடன் சசிகலாவுக்கு அரசியல் ரீதியிலான கருத்து மோதல் நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக தற்போது அவரது தம்பி திவாகரன் களமிறங்கி பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போயஸ் கார்டன் வீட்டுக்கே குடிவந்துவிட்ட அவர், டெல்லியுடன் பேசுவது, கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 22ஆம் தேதி IND vs BAN இடையிலான சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. அதன்போது, வங்கதேச துணை கேப்டன் டஸ்கின் அகமது தூங்கியதால், அணிக்கான பேருந்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அப்போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில், டாஸ் போடுவதற்கு 30 – 40 நிமிடங்களுக்கு முன்பே மைதானத்திற்கு வந்துவிட்டதாக டஸ்கின் தெரிவித்துள்ளார். மேலும், தாமதமாக வந்ததால் தன்னால் ஆட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே ஆகிய படங்களில் மாளவிகா நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மிர்ச்சி சிவாவுடன் படமொன்றில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் கர்ப்பமாக இருந்ததால், படங்களில் நடிக்க வாங்கிய முன் பணத்தை திரும்ப கொடுத்ததாகவும், அதனால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இடைவெளி மிகவும் நீண்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

வருமான வரி இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகள், செயலாக்க தாமதங்கள் காரணமாக சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 சான்றிதழ்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பான்-ஆதார் இணைப்பு தொடர்பான புதிய விதிமுறைகளால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என நிதி நிறுவனங்கள் கூறுகின்றன. ஊழியர்களின் ஊதிய வருவாயில் இருந்து கழிக்கப்பட்ட வரிக்கான சான்றாக நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழே படிவம் 16 ஆகும்.

மேற்குவங்கம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து, எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் வாய் திறக்காதது ஏன்? என, பிரதமர் மோடி வினவியுள்ளார். அவர்களது ஒருதலைபட்சமான இத்தகைய போக்கு, கவலையளிப்பதாக குறிப்பிட்ட அவர், சம்பவம் தொடர்பான வீடியோவை, சமூக வலைதளங்களில் கண்டு தாம் அதிர்ச்சியுற்றதாகவும் தெரிவித்தார்.

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி, சேலைகள் பாமகவினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், அவற்றை பதுக்கி வைத்திருந்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். தோல்வி பயத்தில் திமுக வாக்காளர்களை விலை கொடுத்து வாங்குவதாகவும் அவர் சாடியுள்ளார்.

நடிகை சுனைனாவுக்கும், துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கலித் அல் அமேரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கலித்துக்கு, சலாமா முகமத் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு வந்ததும், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து பெற்றதும் தெரிய வந்துள்ளது.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இச்சட்டங்களுக்கு அரசமைப்பு சட்டத்தை மீறி இந்தியில் பெயர் சூட்டப்பட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில், சட்டங்களுக்கு பெயர் சூட்டுவது நாடாளுமன்றத்தின் விருப்பம், நீதிமன்றம் தலையிட முடியாது என மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கபட்ட நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.