India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலவுத் தொகை ரூ.95 லட்சமாக உயர்ந்துள்ளது. 2014 – ரூ. 40 லட்சம் , 2019 – ரூ. 70 லட்சம், 2024 – ரூ. 95 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் செலவுத் தொகையும் 2014 – ரூ. 16 லட்சம் , 2019 – ரூ. 28 லட்சம், 2024 – ரூ. 40 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் வேட்பாளர் செலவுத் தொகை 75 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 40 கோடி செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின், கார்த்தி உள்ளிட்டோர் அளித்த நிதியைச் சேர்த்து இதுவரை ரூ.12 கோடி வசூலாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, வங்கிக் கடனுக்கு ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், கலை நிகழ்ச்சி நடத்தி, நிதி திரட்டும் திட்டத்தில் நடிகர் சங்க நிர்வாகம் இருப்பதாக அறிய முடிகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனர், 4 மாத குழந்தையான தனது பேரனுக்கு ₹240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசளித்துள்ளார். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹனுக்கு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பேரனுக்கு பரிசு வழங்க நினைத்த அவர், தனது நிறுவனத்தின் பங்குகளில் இருந்து 0.04% பங்குகளை (₹240 கோடி) வழங்கியுள்ளார். இதன்மூலம், உலகின் இளம் வயது கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை நாராயண மூர்த்தியின் பேரன் பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை வரும் 24ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடங்கவுள்ளார். திருச்சியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்து முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ், 31ஆம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், ராமநாதபுரம், குமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரத்துக்காக இரு தொகுதிகள் கேட்டிருந்தது மதிமுக. ஆனால், திமுக ஒரு தொகுதி தான் தரமுடியுமெனக் கூறியபோது, துரைக்காக அதற்கும் மதிமுக சம்மதித்தது. வாரிசு அரசியலை எதிர்த்த கலகக்காரரான வைகோ, இன்று தனது வாரிசுக்கு சீட்டு வாங்கியது காலத்தின் கோலம் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
மக்கள் பணியை நேரடியாக செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் அனுபவம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தனது முடிவுக்கு பாஜக தலைமை தடை விதிக்கவில்லை என விளக்கமளித்தார். மேலும், வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட உள்ளதால் தனது அன்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
CUET நுழைவுத் தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. மே 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டும் தேர்வும், தேர்தலும் ஒரே நாளில் வருகின்றன. எத்தனை பேர் அந்த நாளில் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர் என்பதை அறிந்து, அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மே 15 முதல் 31 வரை CUET நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் எனத் தெரிவித்துள்ளது.
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். கொமதேக-வின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளரான சூரியமூர்த்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், வங்கதேச வீரர் ரிஷாத் ஹொசைன் வாணவேடிக்கை காட்டியுள்ளார். இலங்கை வீரர் ஹசரங்கா வீசிய 39ஆவது ஓவரில், சிக்சர்-பவுண்டரி என விளாசி அசத்தினார். அவர் விளையாடிய கடைசி 10 பந்துகளில் 6 4 6 0 6 6 4 4 4 என பறக்க விட்டு ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தார். மொத்தமாக 18 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தமிழிசை துணை ஜனாதிபதி பதவியை எதிர்பார்ப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தேர்தலில் தோல்வி அடைந்தால் துணை ஜனாதிபதி பதவி உள்ளிட்ட உயர் பதவிகள் தருவார்கள் என அவர் எதிர்பார்க்கிறார். ஆழம் தெரியாமல் அவர் தேர்தல் அரசியலுக்கு மீண்டும் வருகிறார். தூத்துக்குடியில், கனிமொழியை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்கப்போவது உறுதி என சூளுரைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.